Saturday, March 28, 2015
கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காக மாணவர்களிடம் பணம் வசூலிப்பதாக, தனியார் பள்ளி மீது முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்-ஊத்துக்குளி சாலை பாளையக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்களுக்காக மாணவர்கள் தலா ரூ.1,000 நன்கொடை தர வேண்டுமென பள்ளி நிர்வாகம் சார்பில் கேட்டதாகத் தெரிகிறது. இதன்படி, நன்கொடை செலுத்தாததால் 4-ஆம் வகுப்பு படித்து வரும் திருப்பூர் கோல்டன் நகரைச் சேர்ந்த குமரேசன் என்பவரது மகன் அபினவ், வியாழக்கிழமை நடைபெற்ற ஆங்கிலத் தேர்வை எழுத அனுமதி மறுக்கப்பட்டதாம்.
இதனால், ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர் சிலர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகனிடம் இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை முறையிட்டனர்.
அப்போது அவர்கள் அளித்த மனுவில், "ஏற்கெனவே அப்பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காக ரூ.1,000 செலுத்தக் கூறினர். அந்தத் தொகையைச் செலுத்த முடியாத மாணவர்களை தேர்வு எழுத அனுமதி மறுக்கின்றனர். இதுதொடர்பாக உரிய பதிலையும் பள்ளி நிர்வாகம் தெரிவிப்பதில்லை. இந்தப் பிரச்னையில் கல்வித் துறை அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக்கொண்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், இப் புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திமுக கழக மகளிரணிச் செயலாளரும் திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள், திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
குடிநீர் தொட்டி கட்டும் பணி - கலெக்டர் ஜெயந்தி ஆய்வு ...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
-
உலக தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா. சார்பாக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா மதுரையில் நடைபெற்றது, அதில் I T ப்ரோ சென்டரின் நிறுவனர் டாக...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment