Tuesday, February 02, 2016
பஞ்சாயத்து தலைவியை தாக்கிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள சுந்தர்ராஜபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஹரீஸ் ரவி (35). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பால் என்பவரது கினற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக பொது இடத்தில் வாய்க்கால் வெட்டினாராம். இதற்கு கடையனோடை ஊராட்சி மன்றத் தலைவர் ரோஸ் ஜெயக்கொடி (64) தடை விதித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த ஹரீஸ் ரவி, தனது ஆதரவாளர்களான அதே பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் (29), ஜெயசீலன் (50), ஆகியோருடன் சேர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் புகுந்து ரோஸ் ஜெயக்கொடியை உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினாராம்.
இதில் ரோஸ் ஜெயக்கொடி பலத்த காயம் அடைந்தார். அலுவலகத்திலிருந்த மேஜை உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. இது தொடர்பாக நாசரேத் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹரீஸ் ரவி உட்பட 3பேரையும் கைது செய்தனர். கடந்த 14.09.2012-ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புளோரா ஹரீஸ் ரவிக்கு 2 ஆண்டு சிறை, 2ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு இன்று கூறினார். சாட்சியம் இல்லாத காரணத்தினால் மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சந்திரசேகர் ஆஜரானார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment