Monday, May 23, 2016
On Monday, May 23, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 23.05.2016 சபரிநாதன் 9443086297
தமிழக அரசின் சார்பில் முத்தரையர் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு அவர்களின் 1341-வது பிறந்தநாள் விழா - மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
---------------------------
முத்தரையர் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு 1341-வது பிறந்தநாள் விழாவினையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் .பழனிசாமி இன்று (23.05.2016) அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
நாட்டின் விடுதலைக்காகவும் சமுதாய மேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட தலைவர்களின் நினைவினை போற்றிடும் வகையில் அவர்களது திருவுருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருச்சிராப்பள்ளியில் முத்தரையர் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு பிறந்தநாள் விழா அரசு சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் 23-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (23.05.2016) நடைபெற்ற அரசு விழாவில் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் சாலையிலுள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் வருவாய் கோட்டாட்சியர் கணேஷ்குமார்வட்டாட்சியர் செல்வமதி தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் விஸ்வநாதன் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் செல்வக்குமார் தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில பொது செயலாளர் பாஸ்கரன் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் பத்மநாபன்மாநகராட்சி கல்வி குழுத்தலைவர் பூவேந்திரன் முத்தரையர் சங்க பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர், : திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.3 கோடியே 46 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது....
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போ கவும் மாட்டார்கள். சிங்களவர்க...
-
தாராபுரம், விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட கணவர் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த மனைவி தாராபுரம் போலீஸ் நிலையம் வந்து கதற...
-
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து, பொது...
-
சூலூர் போலீஸ் நிலையம் அருகே சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பத்திரப்பதிவு உள்பட அனைத்து பதிவுகளுக்கும் அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக கோவ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஈரோடு மண்டலத்துக்கு உள்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு இடையிலான பெண்களுக்கான பூப்பந்து போட்டி திண்டல் வேளாளர் என்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் தமிழக அரசு உத்திரவுப்படி, காய்கறி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது கொரோனா தொற்று வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாவதை தொடர்ந்து...
-
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கண்டிப்புதூர் காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் காளியப்பன். அவருடைய மகன் கே.ராம்கி (வயது 25). பி.பி.ஏ. பட...
0 comments:
Post a Comment