Friday, May 13, 2016
தென்மேற்கு வங்கக்கடலில் இலங் கைக்கு அருகே நாளை (மே 14) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி, அடுத்த 2 நாட்க ளில் அது வலுவடையும். வெப்பச் ச லனம் காரணமாக மே 15, 16 தே திகளில் தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகில் நாளை (மே 14) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும். அடுத்த இரு நாட்களில் (மே 16) இது அதே இடத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும்போதுதான் அதனால் எந்த அளவுக்கு மழைப் பொழிவு இருக்கும் என்பதைக் கூற முடியும்.
கடந்த 24 மணி நேரத்தைப் பெ ாருத்தவரை வெப்பச் சலனம் காரண மாக தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங் களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை (மே 13) வட தமிழகத்தில் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 60 மில்லி மீட்டர், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆகிய இடங்களில் தலா 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நாகர்கோவில், பெரம்பலூர், பு துக்கோட்டை மாவட்டம் பெருங்க ளூர், தேனி மாவட்டம் பெரியாறு, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஆகிய இடங்களில் தலா 40 மில்லி மீட்டர், உடுமலைப் பேட்டை, கோவை மாவட்டம் சூலூர், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், அம்பாசமுத்திரம், செங்கோட்டை, தேனி மாவட்டம் கூடலூர், பெரியகுளம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, திருச்சி மாவட்டம் முசிறி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், கந்தர்வக்கோட் டை, கோவை ஆகிய இடங்களில் தலா 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வெப்பநிலையைப் பொருத்த வரை நேற்று அதிகபட்சமாக திருத்தணியில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. வெப்பச் சலனம் காரணமாக மே 14 ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். மே 15,16 தேதிகளில் ராமநாதபுரம் , திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விரு துநகர், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னையைப் பொருத்தவரை மே 13, 14 தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment