Friday, September 09, 2016
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு இந்து கோவில்களின் வருமானத்தை எடுத்துக்கொள்கிறது. ஆனால் இதுவரை ஒரு புதிய கோவில்களை கூட கட்டவில்லை. மேலும் 10 ஆண்டுகளுக்கு முன் கோவில்களுக்கு சொந்தமாக 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதாக மானிய கோரிக்கையின் போது சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது, 4 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலம் தான் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்கிறார்கள். 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசு தனது பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டது.இந்துக்களின் சொத்தை எப்படி அரசு பயன்படுத்தலாம்? இதுபோல் பிற மதத்தினரின் சொத்தை பயன்படுத்த முடியுமா? தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில் இருந்து சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வருமானம் வரவேண்டும். ஆனால் அரசு ரூ.60 கோடிதான் வருமானத்தை வசூல் செய்கிறது. சென்னையில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஒரு கிரவுண்ட் இடத்துக்கு ரூ.3 தான் வாடகை வசூல் செய்கிறார்கள். ஒவ்வொரு இந்துவும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தங்கள் பகுதியில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்து விவரங்களை விரிவாக கேட்டு பெற வேண்டும். இந்து கோவில்களை இந்துக்களிடமே அரசு ஒப்படைக்க வேண்டும்.இந்தி மொழி
தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்தி மொழி கூடாது என்று கூறுகிறார். அவருடைய மகள், பேரன் போன்றவர்கள் எப்படி இந்தி பேசுகின்றனர்? தமிழகத்தில் மட்டும் 6 லட்சம் பேர் இந்தி மொழியை தனியாக பணம் கொடுத்து கற்று தேர்வு எழுதுகிறார்கள். இப்படி தனியாக தேர்வு எழுதாமல் பள்ளிகளிலேயே இந்தி மொழியை இலவசமாக கற்பிக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.கருணாநிதி குடும்பத்தில் பேரன், பேத்திகள் யாராவது தமிழ் வழியில் படிக்கிறார்களா? இல்லை. மு.க.ஸ்டாலினின் மருமகன் நடத்தும் பள்ளியில் தமிழ் ஒரு பாடமாக கூட கிடையாது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் உள்ள அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், தலைவர்களின் குழந்தைகள் மற்றும் பேரன், பேத்திகள் யாராவது தமிழ் பள்ளியில் படிக்கிறார்கள் என்று நிரூபித்தால், நான் இப்போதே தி.மு.க. கட்சியில் என்ன, தி.க.வில் கூட இணைய தயார். நம் வாழ்க்கையில் ஒரு போதும் தீண்டாமையை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், மதமாற்றத்தை நாம் ஒரு போதும் அனுமதிக்க கூடாது.இவ்வாறு எச்.ராஜா பேசினார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment