Wednesday, September 21, 2016
அவினாசி,அவினாசியில் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மனு கொடுத்தனர்
அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி, ராயர் கோவில்காலனியை சேர்ந்த 40–க்கு மேற்பட்டோர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு கோரிக்கை மனுகொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:–ராயர் கோவில் காலனியில் 50 குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். 12 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டு வரி தவறாமல் செலுத்தி வருகிறோம்.இந்தநிலையில் எங்கள் பகுதியில் குடியிருந்து வரும் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் உங்கள் எல்லோருக்கும் இடத்தை பத்திரம் பதிவு செய்து தருகிறேன். அதற்கு பணம் செலவு ஆகும் என்றார். நாங்கள் அதை வேண்டாம் என்று கூறிவிட்டோம்.பரபரப்புஅதை மனதில் வைத்து கொண்டு எங்கள் காலனியில் ரோடு வருகிறது. எனவே வீட்டின் முன் இருக்கும் சலவைக்கல், மரம், செடி, கொடிகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில் உங்களது பட்டாவை ரத்து செய்து விடுவேன்.என்று எங்களை மிரட்டுகிறார். எனவே சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அந்த நபரை விசாரித்து அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். முன்னதாக அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment