Thursday, September 22, 2016
திருப்பூர்: தண்ணீர் தேடி வந்த புள்ளி மான், தெரு நாய்கள் கடித்து இறந்தது. உயிருக்கு போராடிய நிலையில், மற்றொரு மான் சுற்றி வருகிறது.
அவிநாசி அருகே கோதபாளையம், வண்ணாற்றங்கரை ஓடை ஆகிய பகுதிகளில், நூற்றுக்கணக்கான புள்ளி மான்கள் வசிக்கின்றன. பருவ மழை பொய்த்ததால், குளம், ஓடை பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. உணவு, நீர் தேவைக்காக, அங்குள்ள புள்ளி மான்கள் வழி தவறி வெளியே வருகின்றன.
மூன்று நாட்களுக்கு முன், கோதபாளையம் வஞ்சிபாளையம் ரோட்டில், ஒன்றரை வயதுடைய பெண் மான், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது. வண்ணாற்றங்கரை ஓடை வழியாக வந்த, ஒன்றரை வயது பெண் மான், வழி தவறி, நேற்று முன்தினம் இரவு திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம், சொர்ணபுரி ரிச் லேன்ட் பகுதிக்குள் வந்துள்ளது.
அங்கிருந்த தெரு நாய்கள் மானை துரத்தி, கடித்து குதறியுள்ளன. பரிதாபமாக இறந்த மானை, வனத்துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனை செய்து, ஓடை பகுதியில் புதைத்தனர்.
அதேபோல், வஞ்சிபாளையம் பகுதியில், ஒன்றரை வயது ஆண் மான் ஒன்று, நாய்கள் கடித்து குதறியதில், பலத்த காயங்களுடன் உயிருக்கு போரடிய நிலையில் சுற்றி வருகிறது.
எனவே, தண்ணீர் பற்றாக்குறையை போக்க, போர்வெல் அமைத்து, அங்குள்ள தொட்டிகளில் நீர் விட்டால், மான்கள் வெளியேறுவது தடுக்கப்படும். இதற்கான நடவடிக்கையை, வனத்துறையினர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment