Monday, April 24, 2017
On Monday, April 24, 2017 by Unknown in Tiruppur
திருப்பூர்: தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மாவட்ட நியமன அலுவர் தமிழ்செல்வன், தங்கவேல், உணவு பாதுகாப்பு அலுவர்கள் முருகேஷன், தங்கவேல் மற்றும் ஊழியர்கள் நேற்று திருப்பூர் அதியமான் வீதியில் உள்ள பகுதியில் மாம்பழம் வைத்திருக்கும் குடோன்களில் திடீர் சோதனை நடத்தினர். இதில் வெள்ளிங்கிரி (35) என்பவர் குடோனில் ரசாயணக்கல் வைத்து சுமார் 3 டன் மாம்பழத்தை பழுக்க வைத்திருப்பது தெரிய வந்தது. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த சாலமன் என்பவருக்கு செந்தமான குடேனில் 2 டன் மாம்பழத்தை பழுக்க வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இரண்டு குடோன்களிளும் உள்ள சுமார் 5 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதனை மாநகராட்சி குப்பை கிடங்கில் வைத்து அழிக்க ஊழியர்களுக்கு உத்தவிட்டனர்.இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்செல்வன் தெரிவிக்கையில்: ரசாயணக்கல் மூலம் பழுக்க வைக்கும் பழங்களை சாப்பிடும்போது, உடலில் உணவு குழாய், குடல் புண், வயிற்றுப்போக்கு, சிலநேரங்களில் புற்றுநோய் வருவதற்க்கும் வாய்ப்புள்ளது. இது போன்ற பழங்களை குழந்தைகள் சாப்பிடும் போது தொண்டை பாதிக்கப்பட்டு பேச்சுத்திறன் இழக்கும் வாய்ப்புள்ளது. 5 டன் மாம்பழங்களையும் திருப்பூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்படும். மேலும், சம்பத்தப்பட்ட கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

0 comments:
Post a Comment