Tuesday, March 13, 2018
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சாதனையாளர் தின விழா
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு
கல்வியாண்டிற்கான (2017-2018) சாதனையாளர் தின விழா 13.03.2018
செவ்வாய்கிழமை மாலை 4.30 மணியளவில் கல்லூரி திறந்த வெளி
கலையரங்கத்தில் அமைக்கப்பெற்ற சிறப்பு பந்தலில் இனிதே நடைபெற்றது.
ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு பாடப்பிரிவிலும் உயர்மதிப்பெண்
பெற்ற 235 மாணவர்கள் இவ்விழாவில் சிறப்பிக்கப்பட்டனர். கல்லூரி முதல்வர்
முனைவர் த. பால் தயாபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற
இவ்விழாவிற்கு நிதித்துறை மேனாள் கணக்கியல் இணைப்பொது
நெறியாளரும் லக்க்ஷ்மி குமரன் & ஸ்ரீதரன் குழும (புது தில்லி) தலைமை
வணிகப் பங்காளருமாகிய திரு எஸ். சீதாராமன் அவர்கள் சிறப்பு
விருந்தினராகக் கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றி பரிசுகளை
வழங்கினார்கள். மதிப்புறு விருந்தினராக திருச்சி அகமது பிரதர்ஸ் ஜவுளி
நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரர் திரு.எச். முகமது சித்திக் அவர்கள்
கலந்துகொண்டு சாதனையாளர்களை வாழ்த்தினார்கள். சமூகசேவை நோக்கில்
சமூகப் பணியாற்றிய எட்டு வகுப்பு மாணாக்கர்களுக்கு Heber Philanthrophy
விருதுகள் வழங்கப்பட்டன. கல்லூரிப் பேராசிரியர் தகுதித் தேர்வில் வென்ற
30க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கும், 15க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும்
பரிசளித்து சிறப்பு செய்யப்பட்டது.
கல்லூரியில் கருத்தரங்குகள் நிகழ்த்திதந்த கருத்தரங்க
ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றிய சுமார் இருபது பேராசிரியர்களுக்கு
சிறப்பு செய்யப்பட்டது.
முன்னதாக இவ்விழாவினை கல்லூரி சமய நெறியாளர் அருள்திரு
பி.செல்வராஜ் அவர்கள் இறைவேண்டல் செய்து தொடங்கி வைத்தார். கல்லூரி
பாடகர் குழுவினர் இறைவாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து, கல்லூரி பாடல்
ஆகியவற்றை பாடினர். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
கல்வியாண்டிற்கான (2017-2018) சாதனையாளர் தின விழா 13.03.2018
செவ்வாய்கிழமை மாலை 4.30 மணியளவில் கல்லூரி திறந்த வெளி
கலையரங்கத்தில் அமைக்கப்பெற்ற சிறப்பு பந்தலில் இனிதே நடைபெற்றது.
ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு பாடப்பிரிவிலும் உயர்மதிப்பெண்
பெற்ற 235 மாணவர்கள் இவ்விழாவில் சிறப்பிக்கப்பட்டனர். கல்லூரி முதல்வர்
முனைவர் த. பால் தயாபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற
இவ்விழாவிற்கு நிதித்துறை மேனாள் கணக்கியல் இணைப்பொது
நெறியாளரும் லக்க்ஷ்மி குமரன் & ஸ்ரீதரன் குழும (புது தில்லி) தலைமை
வணிகப் பங்காளருமாகிய திரு எஸ். சீதாராமன் அவர்கள் சிறப்பு
விருந்தினராகக் கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றி பரிசுகளை
வழங்கினார்கள். மதிப்புறு விருந்தினராக திருச்சி அகமது பிரதர்ஸ் ஜவுளி
நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரர் திரு.எச். முகமது சித்திக் அவர்கள்
கலந்துகொண்டு சாதனையாளர்களை வாழ்த்தினார்கள். சமூகசேவை நோக்கில்
சமூகப் பணியாற்றிய எட்டு வகுப்பு மாணாக்கர்களுக்கு Heber Philanthrophy
விருதுகள் வழங்கப்பட்டன. கல்லூரிப் பேராசிரியர் தகுதித் தேர்வில் வென்ற
30க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கும், 15க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும்
பரிசளித்து சிறப்பு செய்யப்பட்டது.
கல்லூரியில் கருத்தரங்குகள் நிகழ்த்திதந்த கருத்தரங்க
ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றிய சுமார் இருபது பேராசிரியர்களுக்கு
சிறப்பு செய்யப்பட்டது.
முன்னதாக இவ்விழாவினை கல்லூரி சமய நெறியாளர் அருள்திரு
பி.செல்வராஜ் அவர்கள் இறைவேண்டல் செய்து தொடங்கி வைத்தார். கல்லூரி
பாடகர் குழுவினர் இறைவாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து, கல்லூரி பாடல்
ஆகியவற்றை பாடினர். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...


0 comments:
Post a Comment