Wednesday, March 07, 2018
திருவெறும்பூரை அடுத்துள்ள பெல் கணேஷா பஸ் ஸ்டாப் அருகே ஹெல்மெட் கேஸ்போடும் போலீஸாரின் அத்துமீறலால் புதுமணப்பென் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் திருச்சி தஞ்சை சாலை மார்க்கத்தில் போக்குவரத்து 2 மணி நேரத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் முழுவதும் போலீஸார் வாகனச் சோதனை என்கிற பெயரில் பொதுமக்களுக்குத் அச்சுறுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி திருவெறும்பூரை அடுத்த பெல் கணேஷா பஸ் ஸ்டாப் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதிகளை வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் கையைக் காட்டி நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஹெல்மெட் போடாமல் சென்ற தம்பதியினர் நிற்காமல் சென்றதால் போலீஸார், அவர்களை மற்றொரு பைக்கில் விரட்டிச்சென்று மறித்தனர். அப்போது குடிபோதையில் இருந்த காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் பைக்கில் இருந்த தம்பதியினரை எட்டி உதைத்துள்ளார்.
இதனால் பைக்கை ஓட்டி வந்த ராஜா நிலை தடுமாற பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி உஷா சாலையில் கீழே விழுந்துள்ளார்.
அதேநேரம் அந்தப்பகுதியை கடந்த வேன் ஒன்று பைக் ஓட்டி வந்த ராஜா என்கிற தர்மராஜ் மனைவி உஷாவின் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே 3 மாத கர்ப்பிணியான உஷா துடிதுடித்து கணவன் கண் முன்னேயே பலியானார். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அந்தப் பகுதியில் திரண்டனர். பின், போலீஸ்மீது பொதுமக்கள் கல்வீசித் தாக்க, சக போலீஸார் அவரை அலக்காக தூக்கி திருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகேயுள்ள காவிரி அதி நவீன மருத்துவமனையில் பாதுகாப்பாக கொண்டு சேர்த்துள்ளனர்.
இந்த விபத்தையும் போலீஸாரின் நடவடிக்கைகளையும் பார்த்த பொதுமக்கள் ஆவேசமடைந்த தங்களது மொபைல் போன் மூலம் சமூக ஊடகங்களுக்கும், ஊடகங்களுக்கும் தகவல் கொடுக்க அப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருச்சி தஞ்சை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
இதனிடையே உஷாவின் இறப்புக்கு காரணமான போக்குவரத்து ஆய்வாளர் காமராஜை கைது செய்துள்ளதாக எஸ்.பி. கல்யாண் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஹெல்மெட் கேஸ் போட்டு வசூலைப்பார்க்கும் போலீஸ் மனித உயிர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றாலும் சரி இப்படி கேவலமா நடந்துக்கறது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் போலீஸாரை அர்ச்சனை செய்யத்துவங்கி விட்டனர்.
திருச்சி மாவட்டம் முழுவதும் போலீஸார் வாகனச் சோதனை என்கிற பெயரில் பொதுமக்களுக்குத் அச்சுறுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி திருவெறும்பூரை அடுத்த பெல் கணேஷா பஸ் ஸ்டாப் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதிகளை வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் கையைக் காட்டி நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஹெல்மெட் போடாமல் சென்ற தம்பதியினர் நிற்காமல் சென்றதால் போலீஸார், அவர்களை மற்றொரு பைக்கில் விரட்டிச்சென்று மறித்தனர். அப்போது குடிபோதையில் இருந்த காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் பைக்கில் இருந்த தம்பதியினரை எட்டி உதைத்துள்ளார்.
இதனால் பைக்கை ஓட்டி வந்த ராஜா நிலை தடுமாற பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி உஷா சாலையில் கீழே விழுந்துள்ளார்.
அதேநேரம் அந்தப்பகுதியை கடந்த வேன் ஒன்று பைக் ஓட்டி வந்த ராஜா என்கிற தர்மராஜ் மனைவி உஷாவின் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே 3 மாத கர்ப்பிணியான உஷா துடிதுடித்து கணவன் கண் முன்னேயே பலியானார். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அந்தப் பகுதியில் திரண்டனர். பின், போலீஸ்மீது பொதுமக்கள் கல்வீசித் தாக்க, சக போலீஸார் அவரை அலக்காக தூக்கி திருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகேயுள்ள காவிரி அதி நவீன மருத்துவமனையில் பாதுகாப்பாக கொண்டு சேர்த்துள்ளனர்.
இந்த விபத்தையும் போலீஸாரின் நடவடிக்கைகளையும் பார்த்த பொதுமக்கள் ஆவேசமடைந்த தங்களது மொபைல் போன் மூலம் சமூக ஊடகங்களுக்கும், ஊடகங்களுக்கும் தகவல் கொடுக்க அப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருச்சி தஞ்சை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
இதனிடையே உஷாவின் இறப்புக்கு காரணமான போக்குவரத்து ஆய்வாளர் காமராஜை கைது செய்துள்ளதாக எஸ்.பி. கல்யாண் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஹெல்மெட் கேஸ் போட்டு வசூலைப்பார்க்கும் போலீஸ் மனித உயிர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றாலும் சரி இப்படி கேவலமா நடந்துக்கறது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் போலீஸாரை அர்ச்சனை செய்யத்துவங்கி விட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...





0 comments:
Post a Comment