Wednesday, March 14, 2018
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு
கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை
மாலை 3.00 மணியளவில் கல்லூரி திறந்த வெளி கலையரங்கத்தில்
அமைக்கப்பெற்ற சிறப்பு பந்தலில் இனிதே நடைபெற்றது. கல்லூரி முதல்வர்
முனைவர் த. பால் தயாபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற
இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் மற்றும் சிறப்பு
அலுவலர் திரு. என். ரவிச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக்
கலந்து கொண்டு விழாச் சிறப்புரை ஆற்றினார்கள்.
கல்லூரியின் பகுதி V செயல்பாட்டு விரிவாக்க அறிக்கையை (2017-18
கல்வியாண்டிற்கு) கல்லூரி விரிவாக்கப் பணிகள் புல முதன்மையர் முனைவர்
சி.தனபால் அவர்கள் தொகுத்தளித்தார்கள்.
மதிப்புறு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சிராப்பள்ளி ‘ஸ்கோப்’
தொண்டு நிறுவன இயக்குநர் முனைவர் எம். சுப்புராமன் அவர்கள்
வாழ்த்துரை வழங்கினார்கள். சிறந்த தன்னார்வ தொண்டர்களுக்கான
விருதுகளை கல்லூரியின் துணை முதல்வர் எ·ப். சாமுவேல் கிறிஸ்டோபர்
அவர்களும், சுயநிதிப் பிரிவின் துணை முதல்வர் முனைவர் ஆ.ரெல்டன்
அவர்களும் வழங்கினார்கள். பகுதி V பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர்களை
கல்லூரி முதல்வர் பாராட்டி சிறப்பு செய்தார்கள்.
சிறந்த சேவை செய்த பிரிவிற்கான விருதினை மாநகராட்சி ஆணையர்
அவர்கள் வழங்கி சிறப்பு செய்தார்கள்.
முன்னதாக இறைவாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய
இந்நிகழ்விற்கு வருகை தந்தோரை கல்லூரி இயற்கை கழக ஆசிரிய
பொறுப்பாளர் திருமதி கிளெனி ஜோஸ்லின் அவர்கள் வரவேற்றார்கள். கல்லூரி
விரிவாக்கப் பணிகள் புல இணை முதன்மையர் முனைவர் எம். கேபிரியேல்
அவர்கள் நன்றி கூறினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment