Wednesday, September 12, 2018
புவி வெப்பமடைவதை தடுக்கவும், மழை வளம் பெறவும் மரம், செடிகள் அதிகம் வளரவேண்டி பள்ளி-கல்லூரி விழாக்கள், அரசு விழாக்கள், குடும்ப விழாக்கள் மட்டுமல்லாது இயற்கையை போற்றி பாதுகாத்திட பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களுடன் செடிகளை கொடுத்து வருவது அறிந்த ஒன்று.
அதேபோல் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளின் உதவியுடன் விதைப்பந்துகளை தயாரித்து வயல் வெளிகளிலும், ஆற்றங்கரைகளிலும், சமவெளிகளிலும் சமூக ஆர்வலர்கள் தூவி வருகின்றனர். மழைக்காலம் வரும் சமயம் இதுவென்பதால் அவைகளாகவே நீர் கிடைக்கப்பெற்றபின் வனங்களாக மாறும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் நாளை நடக்கவிருக்கின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று விவிட் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு இயற்கையை நேசிக்கும் சிந்தனையையும், முன்னோர்கள் கடைபிடிக்கும் இந்த விழாக்களின் முக்கியத்துவத்தையும் உணர்த்திடும் வகையில் களி மண்ணால் தத்தம் கரங்களால் விநாயகரை வடிவமைக்க வைத்து அந்த விநாயகர் சிலைகளில் வெண்டை, பாகற்காய், அவரை, கீரை வகைகளின் விதைகள், வெள்ளரி பிஞ்சுகளின் விதைகளை பதித்து அவரவர் வீடுகளுக்கு கொடுத்து மரம், செடி கொடிகளின் விதைகளை மாணவர்களும் பெற்றோர்களும் தத்தம் இல்லங்களில் விதைக்கும் புதுவித விழிப்புணர்வினை இன்று ஏற்படுத்தியிருக்கின்றனர்.
மேலும், இந்த விநாயகர் உருவங்களை வடிவமைத்த மழலையர்கள் மனதில் பெரும் உற்சாகமும், பொற்றோர்கள் மனதில் பரவசமும் உச்சமாகத்தான் இருந்தது என்றும், இந்த விநாயகர் சிலைகளை தத்தம் வீடுகளிலேயே சிறிய டப்பாக்கள், மண் பாண்டங்களில் 3-வது நாள் கரைத்து சிறிதளவு மண் சேர்த்து விட்டால் விரைவில் இந்த விநாயகர்கள் செடியாய், கொடியாய், மரமாய் இல்லங்களை அலங்கரிப்பார்கள் எனவும் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விவிட் பள்ளியின் தாளாளர் கமலசரஸ்வதி, முதல்வர் கல்பனா பாலாஜி, ஆசிரியை ஜாஸ்மின் மற்றும் அலுவலக உதவியாளர் மலர்க்கொடி ஆகியோர் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...


0 comments:
Post a Comment