Sunday, March 22, 2020
On Sunday, March 22, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் படி இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த வகையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை ஏற்றி வரும் விமானம் வந்து செல்கிறது.
இந்த வகையில் இன்று காலை சிங்கப்பூரில் இருந்து 163 பயணிகளும், சார்ஜாவில் இருந்து 136 பயணிகளும், துபாயில் இருந்து 86 பயணிகளும் திருச்சி வந்தனர். இதில் மொத்தம் 385 பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. இதில் 12 பெண்கள் உட்பட22 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தது.
இதையடுத்து அவர்கள் திருச்சி கள்ளிக்குடியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக சிகிச்சை வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை நடைபெற்றது. அதில் அவர்கள் யாருக்கும் அத்தகைய வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகவில்லை. எனினும் அதில் மலேசியாவிலிருந்து வந்த ஈரோட்டைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டும் வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறி இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த வகையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை ஏற்றி வரும் விமானம் வந்து செல்கிறது.
இந்த வகையில் இன்று காலை சிங்கப்பூரில் இருந்து 163 பயணிகளும், சார்ஜாவில் இருந்து 136 பயணிகளும், துபாயில் இருந்து 86 பயணிகளும் திருச்சி வந்தனர். இதில் மொத்தம் 385 பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. இதில் 12 பெண்கள் உட்பட22 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...



0 comments:
Post a Comment