Sunday, May 03, 2020
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மணப்பாறை அருகே
வருவாய்துறையினர் மணல் அள்ளிய வாகனங்களை சிறைபிடித்த மக்கள்
சப் கலெக்டர் நேரில் விசாரணை.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வேம்பனூர் பகுதியில் உள்ள ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று மாலையும் மணல் திருட்டு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக வந்த தகவலின் பேரில் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது கிராம நிர்வாக அலுவலர் ஒருவரும், வருவாய் ஆய்வாளர் ஒருவரும் ஜேசிபி இயந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மணல் ஏற்றியது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு வாகனங்களையும் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய்துறையைச் சேர்ந்த அதிகாரிகளே இதுபோன்று மணல் கடத்திச் செல்லலாமா என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஶ்ரீரங்கம் சப் கலெக்டர் சிபி ஆதித்தயா செந்தில்குமார் தலைமையிலான வருவாய்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து வளநாடு காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
மேலும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் எதற்காக மணல் ஏற்றினார்கள்? எவ்வளவு மணல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்பது தொடர்பாக சப் கலெக்டர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
கொரோனா நேரத்தில் ஒட்டு மொத்த அதிகாரிகளும் பம்பரமாய் சுழன்று பணியாற்றி வரும் இந்த சூழலில் வருவாய்துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் இதுபோன்ற ஒரு சம்பவத்தில் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment