Sunday, August 22, 2021
திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழைக்காலம் வருவதை முன்னிட்டு மழைநீர் மற்றும் கழிவு நீர் வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கும் பணி, சாலை பராமரிப்பு மற்றும் தொகுதியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இன்று நடந்தது.
நடைபெற்ற கூட்டத்தில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு பேசும்போது, தொகுதியில் நான் மேற்கொண்ட ஆய்வுகளின்படியும் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கைகளின் படியும் தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் உள்ள குறைகளை போக்கிட வேண்டும் என என்னுடன் ஆய்வுகளின் போது கலந்துகொண்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் வலியுறுத்தி கேட்டு கொண்டும், ஒரு சில பணிகளைத் தவிர பல பணிகள் செய்யாமல் இருப்பதை அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்கள் பணிகளில் அலட்சியம் காட்டாமல் கிழக்கு தொகுதியை தமிழ்நாட்டின் முதன்மை தொகுதியாக மாற்றிட தேவையான சுகாதார நடவடிக்கைகளை துரிதகதியில் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
இந்த ஆலோசனை கூட்டத்தில் நகர பொறியாளர், செயற்பொறியாளர் உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...

0 comments:
Post a Comment