Sunday, August 22, 2021
திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழைக்காலம் வருவதை முன்னிட்டு மழைநீர் மற்றும் கழிவு நீர் வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கும் பணி, சாலை பராமரிப்பு மற்றும் தொகுதியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இன்று நடந்தது.
நடைபெற்ற கூட்டத்தில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு பேசும்போது, தொகுதியில் நான் மேற்கொண்ட ஆய்வுகளின்படியும் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கைகளின் படியும் தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் உள்ள குறைகளை போக்கிட வேண்டும் என என்னுடன் ஆய்வுகளின் போது கலந்துகொண்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் வலியுறுத்தி கேட்டு கொண்டும், ஒரு சில பணிகளைத் தவிர பல பணிகள் செய்யாமல் இருப்பதை அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்கள் பணிகளில் அலட்சியம் காட்டாமல் கிழக்கு தொகுதியை தமிழ்நாட்டின் முதன்மை தொகுதியாக மாற்றிட தேவையான சுகாதார நடவடிக்கைகளை துரிதகதியில் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
இந்த ஆலோசனை கூட்டத்தில் நகர பொறியாளர், செயற்பொறியாளர் உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் அசரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் மைதீன் அப்துல் காதர் தலைமையில் அக்கட்சியினர் இன்று ஆட்...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
கத்தி படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் தமிழ் அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்தன. எனவே, லைக்காவை கழற்றிவிடலாம் என விஜய் முடிவு செய்தார...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...

0 comments:
Post a Comment