Monday, March 09, 2015

On Monday, March 09, 2015 by farook press in ,    
மடத்துக்குளம்,
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மடத்துக்குளத்தில் நடைபெற்ற மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாளையொட்டி மடத்துக்குளத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மராத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்.கல்வி நிறுவன வளாகத்தில் இருந்து தொடங்கிய மராத்தான் ஓட்டப்பந்தயத்தை மடத்துக்குளம் சி.சண்முகவேலு எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒன்றிய கழக செயலாளர் மெட்ராத்தி நா.அண்ணாத்துரை, திருப்பூர் மாவட்ட அரசு வக்கீல் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
மராத்தான் ஓட்டப்பந்தயம் 5 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த ஓட்டப்பந்தயத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 5 கிலோ மீட்டர் பிரிவில் 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், 10 கிலோ மீட்டர் தூரத்தில் ஆண்கள், பெண்கள் என அனைத்து வயதினரும் கலந்து கொண்டனர்.
ஜே.எஸ்.ஆர்.பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய மராத்தான் ஓட்டப்பந்தயம் வேடப்பட்டி, கழுகரை, நால்ரோடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது. 10 கிலோ மீட்டர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் செந்தில்குமார் முதல் பரிசும், அருள்பிரகாஷ் 2–வது பரிசும் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் அனுப்பிரியா முதல் பரிசும், கிருத்திகா 2–வது பரிசும் பெற்றனர். 5 கிலோ மீட்டர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் ரவிக்குமார் முதல் பரிசும் சல்மான் 2–வது பரிசும், பெண்கள் பிரிவில் திவ்யா முதல் பரிசும், முருகேஸ்வரி 2–வது பரிசும் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., சி.மகேந்திரன் எம்.பி. ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். ஜே.எஸ்.ஆர்.பள்ளித்தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ராஜ்குமார், ஜே.எஸ்.ஆர்.மேல்நிலைப்பள்ளி செயலாளர் கார்த்திகேயன், அறக்கட்டளை உறுப்பினர் சதீஷ்குமார், மடத்துக்குளம் பேரூராட்சி மன்றத்தலைவர் பழனிச்சாமி, துணைத்தலைவர் தண்டபாணி, மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் காளீஸ்வரன், கணியூர் காஜாமைதீன், காரத்தொழுவு ரவி, அசோக், பாபு, ஜே.எஸ்.ஆர்.மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சரவணக்குமார், மாண்டிசேரி பள்ளி முதல்வர் சிவபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
On Monday, March 09, 2015 by farook press in ,    
ஈரோடு மாவட்டம் கோபி மணிமேகலை வீதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 60). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பகுதியில் தங்கி, வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாதப்பூர் பகுதியில் முத்துசாமி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முத்துசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி முத்துசாமி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பான புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
On Monday, March 09, 2015 by farook press in ,    
வெள்ளகோவில் அண்ணாநகர் 2–வது வீதியில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 35). நகைபட்டறை தொழிலாளி. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மணிகண்டன் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் நாமக்கல்லில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர்கள் நேற்று வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 4½ பவுன் தங்க நகை, 1¼ பவுன் தங்கதோடு ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.81 ஆயிரத்து 750 ஆகும். இதுகுறித்து மணிகண்டன் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
On Monday, March 09, 2015 by farook press in ,    
வீரபாண்டி,திருப்பூர் அருகே குடும்ப தகராறில் அண்ணணை அடித்து கொன்ற 3 தம்பிகளை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவதுதகராறுதிருப்பூரை அடுத்த மங்கலம் சின்னவர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் அலிகான் (வயது 42). இவருடைய மனைவி மதினா பேகம் (40). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த இவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் அப்துல் அலிகானுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் அப்துல் அலிகானுக்கும், அவருடைய மனைவிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.இரும்பு கம்பியால்தாக்குதல்இதைத்தொடர்ந்து அதே பகுதியில் வசிக்கும் அப்துல் அலிகானின் தம்பிகளான இப்ராகிம் (40), அன்வர்பாதுஷா (30) மற்றும் ஒசூர்கான் (27) ஆகிய 3 பேரும் சேர்ந்து அப்துல் அலிகானிடம் அவருடைய மனைவியிடம் சண்டை போட்டது தொடர்பாக தட்டி கேட்டுள்ளனர்.அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த 3 பேரும் சேர்ந்து அப்துல் அலிகானை அங்கு கிடந்த இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவர் இதுகுறித்து மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பின்னர் அவர் சிகிச்சை பெறுவதற்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் அலிகானின் தம்பிகளான இப்ராகிம், அன்வர் பாதுஷா மற்றும் ஒசூர்கான் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் திருப்பூர் ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். திருப்பூர் அருகே குடும்ப தகராறில் அண்ணணை 3 தம்பிகள் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
On Monday, March 09, 2015 by farook press in ,    
திருப்பூர் ஓடக்காடு பகுதியில் நடைபெற்ற இந்த கொடியேற்று விழாவுக்கு மாதர் சங்க ஓடக்காடு கிளைத் தலைவர் பிந்து தலைமை ஏற்றார். கிளை பொருளாளர் மகேஸ்வரி மாதர் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து சர்வதேச மகளிர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ஏ.சங்கரன் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் பொன்மணி குணசேகரன் ஆகியோர் உரையாற்றினர். இதில் ஓடக்காடு கிளை சார்பில் மாதர் சங்கத்தினர் திரளாகக் கலந்து கொண்டனர்.
-------------

Sunday, March 08, 2015

On Sunday, March 08, 2015 by Unknown in ,    
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கு அதிமுக, திமுகவிற்கு மாற்று அணியாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கேட்டுக் கொண்டார்.
காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் மதுரை பசுமலையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தேர்தலில் ஊழலை ஒழிக்க செலவுகளை மத்திய அரசே ஏற்க வேண்டும். பிரதமர் மோடி இலங்கை செல்வது வரவேற்கத்தக்கது. அதேசமயம் அவர் அங்குள்ள தமிழர்கள் நலன்காக்க வட கிழக்கு மாநிலங்களுக்கு நேரில் சென்று பார்வையிட வேண்டும். ஊழலை ஒழிக்க "லோக் ஆயுக்தா' சட்டத்தையும், பொதுச் சேவைகளுக்கான உரிமைச் சட்டத்தையும் தமிழக அரசு கொண்டுவர வேண்டும். தவறினால் அதற்காக காந்திய மக்கள் இயக்கம் மாநில முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் முதல்வர் கனவை மறந்துவிட்டு அதிமுக, திமுகவிற்கு மாற்று சக்தியாக ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அதற்கு இப்போதே மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்து கூட்டாக போராட்டங்களை நடத்த வேண்டும். அந்த கூட்டணியில் காந்திய மக்கள் இயக்கமும் பங்கேற்கும். காந்திய மக்கள் இயக்கம் 2021 இல் தமிழகத்தின் தவிர்க்க முடியாக சக்தியாக உருவெடுக்கும் என்றார்.
செயற்குழுக் கூட்டத்தில் காந்திய மக்கள் இயக்க மாநிலத் துணைத் தலைவர்கள் கந்தசாமி, கோயில்பிள்ளை, பொருளாளர் குமரய்யா, பொதுச்செயலர் துரைக்கண்ணு, செய்தி தொடர்பாளர் ஜி. அய்யல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றன
On Sunday, March 08, 2015 by Unknown in ,    
காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பது என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கங்களின் போராட்டக் குழு முடிவு செய்துள்ளது.
போராட்டக் குழு சார்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. போராட்டக் குழு மாநில அமைப்பாளரும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவருமான மு.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் மா.பாலசுப்பிரமணியன் தொடக்கி வைத்துப் பேசினார்.
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் மா.விஜயபாஸ்கர், பொறியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் மு.மகாலிங்கம், ஓவர்சியர்கள் சங்க மாநிலத் தலைவர் தே.ஆறுமுகப்பெருமாள், சாலை ஆய்வாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பா.ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஊராட்சி செயலர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம், கணினி உதவியாளர்கள், முழு சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் குடும்ப நல நிதித் திட்டத்தை விரிவுபடுத்துதல், சாலை ஆய்வாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு முறையே பணிமேற்பார்வையாளர் உதவிப்பொறியாளர் பதவி உயர்வு உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 18 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என்றும், இதில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் பங்கேற்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மார்ச் 18 ஆம் தேதி வட்டார அளவில் ஆர்ப்பாட்டம், மார்ச் 19 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், மார்ச் 23 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் என தொடர் போராட்டங்களை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது
On Sunday, March 08, 2015 by farook press in ,    
திருப்பூர்,மார்ச்.8-
அண்ணா தி,மு,க,வை எதிர்க்கும் சக்தி இனி எவருக்குமில்லை என சவால் விடும் வகையில் திருப்பூரில் பாசறை பேரணி அமைந்துள்ளது என அமைச்சர் எம்.எம்.எம்.ஆனந்தன் கூறினார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.இளைஞர் பாசறை,இளம்பெண்கள் பாசறையின் எழுச்சிப் பேரணி புஷ்பா தியேட்டர் அருகில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் அருகில் இருந்து சுமார்.7ஆயிரம் பேர்களுடன் துவங்கியது.பேரணியை மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்து கலந்து கொண்டார். பேரணி முக்கிய வழியாக மாநகராட்சி அலுவலகம் அருகில் நிறைவடைந்தது.
பேரணி முடிவில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
அண்ணா தி.மு.க.விற்கு புத்துயிர் ஊட்டும் வகையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்த இளைஞர் பாசறை,இளம்பெண்கள் பாசறை தோற்றுவித்துள்ளார்.இன்று இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.இன்று நடந்த பேரணி திருப்பூர் மாநகர் மாவட்டம் என்றும் ஜெயலலிதாவின் எக்கு கோட்டை என்பதை நிருபிக்கும் வகையிலும், இனி ஜெயலிதாவை எதிர்க்கும் சக்தி எவருக்குமில்லை என சவால் விடும் வகையில் பறைசாற்றியுள்ளது. எந்த ஒரு நிகழ்ச்சியனாலும் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்ட கழகத்தை விட அதிக அளவில் முக்கியம் தந்து திருப்பூர் மாநகர் மாவட்டம் தான் முதலிடம் வகிக்கும் வகையில் சிறப்பு சேர்த்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 
அண்ணா தி.மு.க.இயக்கத்தில்தான் சாதாரண தொண்டன் கூட உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க தலைவர்கள், எம்.பி.,எம்.எல்.ஏ.,அமைச்சர் ஆக முடியும் இன்று பேரணியில் கலந்து கொண்ட நீங்கள் நாளை மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஆசியுடன் உயர்ந்த பதவிக்கு வரலாம். அண்ணா தி.மு.க.வில் மட்டுமே உழைப்பவர்களுக்கு நிச்சயம் பதவி கிடைக்கும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர் பாசறையினர் கடுமையாக பணி செய்ததின் பயனாக 39 தொகுதிக்கு 37 தொகுதி பெற்று இருகிறோம் அதேபோல் வருகின்ற 2016ம் ஆண்டு நடை பெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் 234 தொகுதியிலும் அண்ணா தி.மு.க.வெற்றிக்கு இந்த பேரணியே  ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி தனது வாழ்த்துரையில், எள் போட்டால் எண்ணையாகும் வகையில் மிக பிரமாண்டமான எழுச்சி பேரணி நடந்துள்ளது. கழகத்திற்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் அமைந்துள்ள பேரணி அண்ணா தி.மு.க.  இயக்கத்தை தோற்றுவித்த எம்.ஜி.ஆர்.மறைவுக்கு பின்னால் நம்மையெல்லாம் தன்  இமைபோல் கட்டி காத்து வரும் மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதையாகி தமிழகத்தின்  நிரந்தர முதல்வராக பொறுப்பேற்று  நமையும், இந்த் நாட்டையும் வழி நடத்துவார் என பேசினார்.
மேலும் பல்லடம் எம்.எல்.ஏ.,பரமசிவம், மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.சண்முகம், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், ஆகியோர் வாழ்த்தி பேசினார்.மாவட்ட பாசறை செயலாளர் ஏ.எம்.சதீஷ் வரவேற்று பேசினார்.துணை மேயர் சு.குணசேகரன் பேரணியின் உறுதிமொழியை வாசித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சார்பு அணி மாவட்ட,  நகர,ஒன்றிய நிர்வாகிகள் வடக்கு தெற்கு, தொகுதி நிர்வாகிகளால்.பல்லடம், பொங்கலூர் ஒன்றிய செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றியகுழு தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற, தலைவர்கள், கவுன்சிலர்கள் மாமனர் உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குனர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

On Sunday, March 08, 2015 by farook press in ,