Monday, September 22, 2014
மீனவர் பிரச்னை தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகப் பேச வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ஞானதேசிகன் கூறியதாவது:-
“இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது. தற்போது மீனவர் பிரச்னை அபாயகரமான நிலைக்குச் சென்றுள்ளது.
காங்கிரஸ் தலைமையில் மத்திய அரசு இருந்தபோது மீனவர்களையும், படகுகளையும் மீட்பதற்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீனவர்கள் பிடிபட்ட மறுநாளே விடுவிக்கப்பட்டனர்.
ஆனால், தமிழகத்தில் புத்த பிட்சுகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்ற பின்னர்தான், மீனவர்கள் விடுதலையில் தாமதம் ஏற்பட்டது.
நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததும், 100 நாளில் மீனவர்கள் பிரச்னையைத் தீர்த்துவிடுவோம் என்று பாஜகவினர் பிரசாரம் செய்தனர். ஆனால், இன்னும் தீர்வு காணப்படவில்லை.
தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவது வேதனைக்குரியது. மீனவர் பிரச்னையில் தமிழக பாஜகவினர் குழப்பத்தில் இருக்கின்றனர். ஆளுக்கொரு கருத்தைச் சொல்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் நேரடியாகப் பேசி, மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் பிரச்னை இரு நாடுகள் சம்பந்தப்பட்டதாகும். ஆனால், இங்குள்ள சில கட்சிகள் தேர்தலுக்குத் தேர்தல் இந்தப் பிரச்னையை கையில் எடுத்து மக்களைத் திசை திருப்புகின்றன. இலங்கைப் பிரச்னை தீர்ந்து விட்டால், பல கட்சிகளுக்கு அரசியல் நடத்த முடியாமல் போய்விடும்.
13 ஆவது சட்டத் திருத்தத்தை அமல்படுத்தி இலங்கையில் வாழும் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கருத்து. இதைத்தான் ஆட்சியில் இருந்தபோது வலியுறுத்தினோம்“ இவ்வாறு கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment