Monday, August 29, 2016
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
மாகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் சட்டக்கூலி ரூ203-ஐ வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று (29-9-2016) காலை 11 மணியளவில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தாலுக்கா வி.தொ.ச.தலைவர் ஆர்.மணியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வி.தொ.ச.தலைவர் எஸ்.லோகநாதன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ஆர்.குமார், தமிழ்நாடு விவசாய சங்க தாலுக்கா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இப்போராட்டத்தில் வி.தொ.ச. தாலுக்கா செயலாளர் க.பிரகாஷ், துணைத்தலைவர் ராமசாமி, சிஐடியு நிர்வாகிகள் பன்னீர்செலவம், வி.கே.பழனிசாமி உட்பட 40 பெண்கள் உட்பட 100 பேர் கலந்து கொண்டனர். (இணைப்பு: போட்டோ)
கோரிக்கைகள்;
-மாகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் சட்டக்கூலி ரூ203-ஐ வழங்க வேண்டும். சம்பளம் வழங்க காலதாமதம் செய்ய கூடாது. 100 நாள் வேலையை 85 நாளாக குறைக்காதே! 150 நாளாக உயர்த்திடுக!
-ஊத்துக்குளி தாலூக்கவில் முதியோர், விதவை, ஊனமுற்றோர் உதவி தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களை பரீசிலித்து உத்திரவுகள் வழங்க வேண்டும். உதவி தொகை நிறுத்தியோர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும்.
-ஊத்துக்குளி தாலூக்கவில் புதிய குடும்ப அட்டை கேட்டு 2013 ஆண்டு முதல் விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் குடும்ப அட்டை வழங்கப்படவில்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. பெறப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பங்களுக்கும் உடனடியாக குடும்ப அட்டை வழங்க வேண்டும்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment