Tuesday, August 30, 2016

On Tuesday, August 30, 2016 by Tamilnewstv in
திருச்சி – 30.8.16            சபரிநாதன் 9443086297
திருச்சிவிவசாயிகள் மற்றும் அனைத்து கட்சிகள் அமைப்புகள் ரயில் மறியல் - 500 க்கும் மேற்பட்டோர் கைது
திருச்சியில் ஜங்சன் ரயில் நிலையத்தில் இன்று விவசாயிகள் நடத்திய மறியல் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் திமுக மதிமுக வினர் ஏராளமானோர் பங்கேற்பு
விடுதலை சிறுத்தைகள் மாநில துணைச்செயலாளர். திருச்சி. . பிரபாகரன். மாநில துணைச்செயலாளர் கா. அரசு. பாராளுமன்ற செயலாளர். ஜெ. தங்கதுரை. மாவட்ட செயலாளர்கள் நீலவானன். முத்தழகன். மவட்ட து. செயலாளர். புல்லட். லாரனஸ். அன்புச்செல்வன். தொகுதி செயலாளர்கள். வழக்கறிஞர். சதீஸ். கலைச்செல்வன். ஆற்றலரசு. மாவட்ட பொருளாளர். மதனகோபால். முரசு. மற்றும் திரலான விசிக. தொண்டர்கள்ஆகியோர் கலந்து கொண்டனர்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்டவை இணைந்து தமிழகத்திற்கு ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் வழங்க வேண்டிய 94 டிஎம்சி தண்ணீரில் நிலுவையில் உள்ள 70 டிஎம்சி தண்ணீரை கர்நாடகாவிடம் இருந்து மத்திய  அரசு பெற்றுத்தர வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி ஒழுங்காற்று குழுவையும் காலதாமதப்படுத்தாமல் உடனடியாக அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் சிபிஎம் சிபிஐ மதிமுக விடுதலை சிறுத்தைகள் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விவசாய சங்கத்தினர்  வர்த்தக அமைப்புகள் சமூக நல அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதில் விடுதலை கட்சியின் தொண்டர்கள் திடீரென மறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
திருச்சி ஜங்சன் ரயில் நிலைய வளாகத்தில் நுழைந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 500க்கும் மேற்பட்டோரை தடுத்து நிறுத்திய போலிஸார்  அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.