Friday, September 30, 2016

On Friday, September 30, 2016 by Unknown in    

திருப்பூர் : -

திருப்பூரில் உள்ளாட்சி தேர்தலில் திமுக வில் போட்டியிடுவதற்காக சீட்டு வழங்காததால் முன்னாள் மாநகராட்சியின் திமுக எதிர் தலைவர் சுப்பிரமணி சுயேர்ச்சையாக போட்டியிடப்போவதாக அறிவிப்பு.

திருப்பூர் 32 வது வார்டை சேர்ந்தவர் செங்கப்பள்ளி சுப்பிரமணி இவர் 40 ஆண்டுகளாக திமுக வில் இருந்து வருகிறார்.கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுகாவின் சார்பில் 32 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அதனை தொடர்ந்து மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகுத்தார்.இந்நிலையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக திருப்பூர் மாவட்ட திமுக வில் விருப்பமனு அளித்து இருந்தார்.இந்நிலையில் நேற்று திமுக சார்பில் போட்டியிடும் வேட்ப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.இதில் செங்கப்பள்ளி சுப்பிரமணியத்தின் பெயர் இல்லாத நிலையில் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டகாகவும் கடந்த முறை தனக்கு சீட்டு வழங்கி 32 வது வார்டு பகுதியில் அநேக மக்களின் ஆதரவை பெற்றுள்ளதாகவும் தற்பொழுது திமுக வில் தனக்கு சீட்டு கொடுக்காமல் மற்ற ஒருவருக்கு சீட்டு வழங்கி உள்ளதால் தான் திமுக வின் சார்பில் போட்டியிடும் வேட்ப்பாளரை எதிர்த்து சுயெர்ச்சையாக போட்டியிடப்போவதாகவும் அதில் தான் வெற்றி பெறுவேன் என்றும் கூறினார்.

0 comments: