Tuesday, July 22, 2014
On Tuesday, July 22, 2014 by Anonymous in Sports
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 28 ஆண்டுக்கு பின் வரலாற்று சாதனையை படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
கடந்த 17 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச தீர்மானித்தது. இத்னைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 295 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. முதல் இன்னிங்சில் ரகானே சிறப்பாக ஆடிய 103 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜிஎஸ் பல்லன்ஸ் 110 ரன்களும், பிளன்கட் 55 ரன்களும் குவித்தனர். இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 342 ரன்களுக் ஆட்டம் இழந்தது.
முரளி விஜய் 95 ரன்களும், ரவீந்தர் ஜடேஜா68 ரன்களும், புவனேஸ்வர் குமார் 52 ரன்களும், குவித்தனர். இதனையடுத்து 319 ரன்கள் எடுத்தால் வெற்றிய என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் துவக்க வீரர்கள் கூக் 22 ரன்களுடனும், ரோம்சன் 7 ரன்களுடனும், பல்லான்ஸ் 27 ரன்களுடனும், பெல் ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
இதனையடுத்து நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத்தொடர்ந்து கடைசி நாளான இன்று களம் இறங்கியது. 5 ஆவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ரூட், எம்எம் அலி ஜோடி100 ரன்கள் குவித்தது. இந்நிலையில் ரூட் 66 ரன்களுடனும், அலி 39 ரன்களுடனும் அவுட் ஆகினர். இதனையடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதனால் இங்கிலாந்து அணி 88.3 ஓவரில் 224 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசிய இஷாந்த் சர்மா 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
முன்னதாக முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழத்திய புவனேஸ்குமார், 36 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 52 ரன்களும் எடுத்து சிறப்பாக ஆடினார்.
28 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து அணியை லார்ட்ஸ் மைதானத்தில் வென்றுள்ள இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment