Monday, July 21, 2014
திருப்பூர், ஜூலை 21-
திருப்பூர் முருங்கப்பாளையம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை சார்பில் நடத்தப்பட்டு வரும் இலவச மாலை நேர வகுப்பு ஐந்தாண்டுகளை நிறைவு செய்து ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
முருங்கம்பாளையம் வாலிபர் சங்க கிளை அலுவலகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக அப்பகுதியில் வாழும் ஏழை, எளிய உழைக்கும் மக்கள் வீட்டு குழந்தைகளுக்கு இலவச மாலை நேர வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜூலை மாதத்தில் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த மாலை நேர வகுப்பில், தற்போது 35 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இங்கு கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. தீபா என்ற பட்டதாரி பெண், ஆசிரியையாக இருந்து இந்த வகுப்புகளில் மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.
இது தவிர சனிக்கிழமை நாளில் விளையாட்டு, ஓவியம் போன்று பலவிதமான பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பதிவேடு தயார் செய்து அதிக நாட்கள் வகுப்பிற்கு வருகை தரும் மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை இலவசமாக வழங்கப்படுகிறது.
முருங்கப்பாளையம் கிளை வாலிபர் சங்க தலைவர் அருள் பிரகாஷ் தலைமையில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆசிக், ரியாஸ், கோகுல் ஆகியோர் கண்காணித்து வகுப்பை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.
இந்த ஐந்தாண்டு காலத்தில் இதுவரை சுமார் 175 பேர் இங்கு படித்து பயனடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்கள் சுமார் 15 பேர் அரசுப் பொதுத்தேர்வில் நானூறுக்கும் மேல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றிருப்பதுடன், இங்கு இதுவரை படித்த எந்தவொரு மாணவரும் ஆண்டு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடைந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நூறு சதவிகிதம் வெற்றி பெற வைக்கும் வாலிபர் சங்கத்தின் இந்த மாலை நேர வகுப்புக்கு இந்த பகுதி மக்கள் நம்பிக்கையோடு தங்கள் குழந்தைகளை அனுப்பி வருகின்றனர். தொய்வின்றி இப்பணியை தொடர்ந்து கொண்டுசெல்வோம் என வாலிபர் சங்க ஊழியர்கள் நம்பிக்கையோடு தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...

0 comments:
Post a Comment