Monday, July 21, 2014
திருப்பூர், ஜூலை 21-
திருப்பூர் முருங்கப்பாளையம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை சார்பில் நடத்தப்பட்டு வரும் இலவச மாலை நேர வகுப்பு ஐந்தாண்டுகளை நிறைவு செய்து ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
முருங்கம்பாளையம் வாலிபர் சங்க கிளை அலுவலகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக அப்பகுதியில் வாழும் ஏழை, எளிய உழைக்கும் மக்கள் வீட்டு குழந்தைகளுக்கு இலவச மாலை நேர வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜூலை மாதத்தில் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த மாலை நேர வகுப்பில், தற்போது 35 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இங்கு கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. தீபா என்ற பட்டதாரி பெண், ஆசிரியையாக இருந்து இந்த வகுப்புகளில் மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.
இது தவிர சனிக்கிழமை நாளில் விளையாட்டு, ஓவியம் போன்று பலவிதமான பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பதிவேடு தயார் செய்து அதிக நாட்கள் வகுப்பிற்கு வருகை தரும் மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை இலவசமாக வழங்கப்படுகிறது.
முருங்கப்பாளையம் கிளை வாலிபர் சங்க தலைவர் அருள் பிரகாஷ் தலைமையில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆசிக், ரியாஸ், கோகுல் ஆகியோர் கண்காணித்து வகுப்பை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.
இந்த ஐந்தாண்டு காலத்தில் இதுவரை சுமார் 175 பேர் இங்கு படித்து பயனடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்கள் சுமார் 15 பேர் அரசுப் பொதுத்தேர்வில் நானூறுக்கும் மேல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றிருப்பதுடன், இங்கு இதுவரை படித்த எந்தவொரு மாணவரும் ஆண்டு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடைந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நூறு சதவிகிதம் வெற்றி பெற வைக்கும் வாலிபர் சங்கத்தின் இந்த மாலை நேர வகுப்புக்கு இந்த பகுதி மக்கள் நம்பிக்கையோடு தங்கள் குழந்தைகளை அனுப்பி வருகின்றனர். தொய்வின்றி இப்பணியை தொடர்ந்து கொண்டுசெல்வோம் என வாலிபர் சங்க ஊழியர்கள் நம்பிக்கையோடு தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment