Monday, July 21, 2014
மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப காலி பணியிடங்களை நிரப்ப வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநாடு கோரிக்கை
திருப்பூர், ஜூலை23-
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்கி, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநாடு கோரியுள்ளது.திருப்பூரில் ஞாயிறன்று எப்.எம்.குத்புதீன் அரங்கத்தில் (ஹார்வி குமாரசாமி கல்யாண மண்டபம்) வருவாய்த்துறை அலுவலர் சங்க பொன்விழா ஆண்டு மாவட்ட மாநாடு நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.சைபுதீன் தலைமை தாங்கினார். மத்திய செயற்குழு உறுப்பினர் ச.முருகதாஸ் வரவேற்றார். முன்னாள் மாநில அமைப்புச் செயலாளர் வி.டி.சுப்பிரமணியன் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார். இதில் மாவட்டச் செயலாளர் ஜி.விஜயன் வேலை அறிக்கை முன்வைத்தார். மாவட்டப் பொருளாளர் எம்.கண்ணன் வரவு செலவு அறிக்கை முன்வைத்தார். இதன் மீது பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது.
இதையடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வருவாய்த்துறை அலுவலர்களுக்கு 30 சதவிகிதம் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு இரவு காவலர், துப்புரவுப் பணியாளர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகப் பிரிவிற்கு பயனாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்கள் வழங்குவதுடன், தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும், மாவட்ட மாறுதல் கோரியுள்ள விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், இரவு பகல் பாராது கடுமையாக தேர்தல் பணியாற்றிய வருவாய்த்துறை அலுவலர்களுக்கு இரண்டு மாத அடிப்படை ஊதியம் மற்றும் இதர படிகளை வழங்க வேண்டும், திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்திற்கு கட்டட வசதி செய்து தர வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு அனைவருக்கும் பயனளிப்பு ஓய்வூதியம் வழங்கும் நடைமுறையை தொடர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்தியது.
இம்மாநாட்டில், மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் த.பாரிவேல் ஆகியோர் பங்கேற்று, பணி ஓய்வு பெற்ற அலுவலர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்தனர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.லோகநாதன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் து.ராஜகோபாலன், கிராம உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கு.குமரேசன், மாநிலப் பொதுச் செயலாளர் த.சிவஜோதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நிறைவாக மாவட்ட இணைச் செயலாளர் அ.குமாரவேல் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment