Monday, July 21, 2014
பல்லடம் ஜூலை. 21–
பல்லடம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் ஸ்டால்பின் (வயது 29). இளைஞர் காவல் படையை சேர்ந்தவர் சரவணன் (24). இவர்கள் நேற்று இரவு 4 ரோடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி வாகன தணிக்கை செய்தனர்.
அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் போலீஸ்காரர் ஸ்டால்பின், இளைஞர் காவல் படையை சேர்ந்த சரவணன் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீஸ்காரர் ஸ்டால்பினின் தோள் பட்டை மற்றும் கையில் குத்தினான்.
வலி தாங்க முடியாமல் ஸ்டால்பின் அலறினார். இதை அறிந்த பல்லடம் போலீசார் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீஸ்காரரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயன்ற வாலிபர்களை விரட்டி சென்று பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த பஷீர் (25), சேகர் (24) என்பது தெரிய வந்தது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...

0 comments:
Post a Comment