Saturday, July 19, 2014
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தலமலை வனச்சரகம் திம்பம் வனச் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் பணியில் இருந்த வனக்காவலர் க.கிருஷ்ணனை சிறுத்தை தாக்கி கொன்றது.
இதேபோன்று கடந்த ஜூன் 11–ந் தேதி திம்பம் 27–வது மலைப்பாதையில் தாளவாடி முகமது இலியாஸ் (வயது 25) என்பவர் சிறுத்தையால் கொல்லப்பட்டார்.
இந்த தொடர் சம்பவத்தால் திம்பம் பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் ஐ.அன்வர்தீன், சத்தி புலிகள் காப்பக துணை இயக்குநர்கள் கே.ராஜ்குமார், சி.ஹெச்.பத்மா, பாரி ஆகியோர் நேற்று சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். விசாரணையில், தலமலையில் புறப்பட்ட அரசு பஸ் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு 8.30 மணிக்கு திம்பம் சோதனை சாவடிக்கு வந்தது. அப்போது, பூட்டி இருந்த சோதனைசாவடியை கிருஷ்ணன் திறந்து விட்டார்.
அதன் பிறகு, சோதனைச் சாவடியை பூட்டி விட்டு அப்பகுதியில் சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை கிருஷணன் மீது பாய்ந்தது. இதனால் தப்பிக்க ஓடிய கிருஷ்ணனை சிறுத்தை கடித்துக் கொன்றது. பின்னர், உடலை 50 அடி தூரம் வரை இழுத்துச் சென்றது தெரியவந்தது.
மனிதரை கொன்று பழகிய சிறுத்தையை உடனடியாக பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக செயல்பட்டுள்ளனர். முதற் கட்டமாக, சத்தியில் இருந்து 2 இரும்புகூண்டுகள் திம்பம் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.
ஈரோடு மண்டல வனப் பாதுகாவலர் ஐ.அன்வர்தீன் நேற்று கூண்டு வைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்தனர். கள இணை இயக்குநர்களின் ஆலோசனையின்படி நீர்நிலை மற்றும் சிறுத்தையின் வழித்தடத்தில் கூண்டுகள் வைக்கப்பட்டன.
கூண்டின் உட்புறத்தில் ஆடு மற்றும் நாய் கட்டப்பட்டுள்ளது. ஆட்டை தின்பதற்காக வரும் சிறுத்தை கூண்டுக்குள் மாட்டிக் கொள்ளும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
0 comments:
Post a Comment