Saturday, July 19, 2014
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தலமலை வனச்சரகம் திம்பம் வனச் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் பணியில் இருந்த வனக்காவலர் க.கிருஷ்ணனை சிறுத்தை தாக்கி கொன்றது.
இதேபோன்று கடந்த ஜூன் 11–ந் தேதி திம்பம் 27–வது மலைப்பாதையில் தாளவாடி முகமது இலியாஸ் (வயது 25) என்பவர் சிறுத்தையால் கொல்லப்பட்டார்.
இந்த தொடர் சம்பவத்தால் திம்பம் பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் ஐ.அன்வர்தீன், சத்தி புலிகள் காப்பக துணை இயக்குநர்கள் கே.ராஜ்குமார், சி.ஹெச்.பத்மா, பாரி ஆகியோர் நேற்று சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். விசாரணையில், தலமலையில் புறப்பட்ட அரசு பஸ் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு 8.30 மணிக்கு திம்பம் சோதனை சாவடிக்கு வந்தது. அப்போது, பூட்டி இருந்த சோதனைசாவடியை கிருஷ்ணன் திறந்து விட்டார்.
அதன் பிறகு, சோதனைச் சாவடியை பூட்டி விட்டு அப்பகுதியில் சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை கிருஷணன் மீது பாய்ந்தது. இதனால் தப்பிக்க ஓடிய கிருஷ்ணனை சிறுத்தை கடித்துக் கொன்றது. பின்னர், உடலை 50 அடி தூரம் வரை இழுத்துச் சென்றது தெரியவந்தது.
மனிதரை கொன்று பழகிய சிறுத்தையை உடனடியாக பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக செயல்பட்டுள்ளனர். முதற் கட்டமாக, சத்தியில் இருந்து 2 இரும்புகூண்டுகள் திம்பம் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.
ஈரோடு மண்டல வனப் பாதுகாவலர் ஐ.அன்வர்தீன் நேற்று கூண்டு வைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்தனர். கள இணை இயக்குநர்களின் ஆலோசனையின்படி நீர்நிலை மற்றும் சிறுத்தையின் வழித்தடத்தில் கூண்டுகள் வைக்கப்பட்டன.
கூண்டின் உட்புறத்தில் ஆடு மற்றும் நாய் கட்டப்பட்டுள்ளது. ஆட்டை தின்பதற்காக வரும் சிறுத்தை கூண்டுக்குள் மாட்டிக் கொள்ளும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment