Sunday, July 20, 2014
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் கடந்த ஜூன் 11–ம் தேதி தாளவாடி முகமது இலியாஸ் (25) என்பவர் சிறுத்தையால் கொல்லப்பட்டார். மேலும், கடந்த 16–ந் தேதி இரவு திம்பம் வனச்சோதனை சாவடியில் இரவு பணியில் இருந்த வனக்காவலர் கிருஷ்ணனை சிறுத்தை தாக்கி கொன்றது.
இந்த 2 பேரையும் திம்பத்தில் உலாவும் சிறுத்தை தான் கடித்துக் கொன்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
சிறுத்தை திம்பம் மலைப்பாதையில் தொடர்ந்து நடமாடி வருகிறது. இதனால் திம்பம், காளி திம்பம் மற்றும் ஆசனூர் மலை பகுதியில் உள்ள 20–க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்,
சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திம்பம் மலைப்பாதையில் பொருத்தப்பட்ட தானியங்கி காமிராவில் சிறுத்தை நடமாடுவது பதிவாகியுள்ளது. இதையடுத்து சிறுத்தை அதே பகுதியில் உலாவுவது உறுதிபடுத்தப்பட்டதை அதனை பிடிக்க நீர்நீலை மற்றும் வழித்தடத்தில் 2 கூண்டுகள் வைக்கப்பட்டன.
சிறுத்தை நடமாடிய பாதையில் நேற்று மேலும் ஒரு கூண்டு வைக்கப்பட்டது. இரு கூண்டுகளில் ஆடுகளும் ஒரு கூண்டில் நாயும் வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, துப்பாக்கி மூலம் மயக்கஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் மற்றொறு பிரிவினரும் ஈடுபட்டுள்ளனர்.
சத்தி, ஆசனூர் புலிகள் காப்பக கள துணை இயக்குநர்கள் சி.ஹெச்.பத்மா, கே.ராஜ்குமார், வனசரக அலுலவர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள் என மொத்தமாக 100–க்கும் மேற்பட்டோர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் முடக்கி விடப்பட்டுள்ளனர். இதற்கென அவர்கள் நவீன தொழிநுட்ப கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:–
சிறுத்தையால் வனக்காவலர் கொல்லப்பட்ட பிறகு சிறுத்தையின் கால் தடங்கள் உள்ள பகுதியில் 3–வது கூண்டு வைக்கப்பட்டுள்ளது. தற்போது சாரல் மழை பெய்து கொண்டிருப்பதாலும் திம்பம் பகுதியில் மனித நடமாட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளதாலும் சிறுத்தை மீண்டும் சாலையோரம் தென்பட வாய்ப்புள்ளது. இதனால் விரைவில் சிறுத்தை உயிருடன் பிடிபட வாய்ப்புள்ளது என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment