Sunday, July 20, 2014
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் கடந்த ஜூன் 11–ம் தேதி தாளவாடி முகமது இலியாஸ் (25) என்பவர் சிறுத்தையால் கொல்லப்பட்டார். மேலும், கடந்த 16–ந் தேதி இரவு திம்பம் வனச்சோதனை சாவடியில் இரவு பணியில் இருந்த வனக்காவலர் கிருஷ்ணனை சிறுத்தை தாக்கி கொன்றது.
இந்த 2 பேரையும் திம்பத்தில் உலாவும் சிறுத்தை தான் கடித்துக் கொன்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
சிறுத்தை திம்பம் மலைப்பாதையில் தொடர்ந்து நடமாடி வருகிறது. இதனால் திம்பம், காளி திம்பம் மற்றும் ஆசனூர் மலை பகுதியில் உள்ள 20–க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்,
சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திம்பம் மலைப்பாதையில் பொருத்தப்பட்ட தானியங்கி காமிராவில் சிறுத்தை நடமாடுவது பதிவாகியுள்ளது. இதையடுத்து சிறுத்தை அதே பகுதியில் உலாவுவது உறுதிபடுத்தப்பட்டதை அதனை பிடிக்க நீர்நீலை மற்றும் வழித்தடத்தில் 2 கூண்டுகள் வைக்கப்பட்டன.
சிறுத்தை நடமாடிய பாதையில் நேற்று மேலும் ஒரு கூண்டு வைக்கப்பட்டது. இரு கூண்டுகளில் ஆடுகளும் ஒரு கூண்டில் நாயும் வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, துப்பாக்கி மூலம் மயக்கஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் மற்றொறு பிரிவினரும் ஈடுபட்டுள்ளனர்.
சத்தி, ஆசனூர் புலிகள் காப்பக கள துணை இயக்குநர்கள் சி.ஹெச்.பத்மா, கே.ராஜ்குமார், வனசரக அலுலவர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள் என மொத்தமாக 100–க்கும் மேற்பட்டோர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் முடக்கி விடப்பட்டுள்ளனர். இதற்கென அவர்கள் நவீன தொழிநுட்ப கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:–
சிறுத்தையால் வனக்காவலர் கொல்லப்பட்ட பிறகு சிறுத்தையின் கால் தடங்கள் உள்ள பகுதியில் 3–வது கூண்டு வைக்கப்பட்டுள்ளது. தற்போது சாரல் மழை பெய்து கொண்டிருப்பதாலும் திம்பம் பகுதியில் மனித நடமாட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளதாலும் சிறுத்தை மீண்டும் சாலையோரம் தென்பட வாய்ப்புள்ளது. இதனால் விரைவில் சிறுத்தை உயிருடன் பிடிபட வாய்ப்புள்ளது என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment