Tuesday, July 22, 2014
On Tuesday, July 22, 2014 by Anonymous in Sports
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஸ்குவாஷ் அணியினருடன் பயிற்சியாளர் சைரஸ் போஞ்சா, ஸ்காட்லாந்துக்கு செல்லாததால் வீரர், வீராங்கனைகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
செüரவ் கோஷல் மற்றும் தீபிகா பல்லிகல் தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட ஸ்குவாஷ் அணி கிளாஸ்கோ புறப்பட்டு சென்றது. அவர்களுடன் மலேசியாவைச் சேர்ந்த பயிற்சியாளர் சுப்ரமணியன் சிங்காரவேலு, மகளிர் அணி பயிற்சியாளர் புவனேஸ்வரி குமாரி உள்ளிட்டோர் சென்றுள்ளனர். ஆனால், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அணியின் பயிற்சியாளராக உள்ள சைரஸ் அணியினருடன் செல்லவில்லை.
இது குறித்து துரோணாச்சாரியா விருது வென்ற அவர் கூறுகையில் "என்ன நடந்தது எனத் தெரியவில்லை. எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. தாமதமாக ஸ்காட்லாந்து செல்வேனா என்பதும் தெரியாது. மொத்தத்தில் அணியினருடன் இல்லாதது வருத்தம் அளிக்கிறது' என்றார்.
"பயிற்சியாளர் சைரஸ் எங்களுடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவருக்கும், எங்களுக்கும் இடையிலான உறவு சிறப்பாக இருந்தது. நாங்கள் அவரை "மிஸ்' செய்கிறோம்' என வீரர்கள் தெரிவித்தனர்.
இதற்கு இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு செயலாளர் ஸ்ரீவத்ஸன் பதிலளிக்கையில் "ஸ்குவாஷ் கூட்டமைப்பின் செலவில் சைரஸ் விரைவில் கிளாஸ்கோ செல்வார், அரசு செலவில் அல்ல' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
0 comments:
Post a Comment