Wednesday, August 20, 2014
உடுமலை, : உடுமலையில் விடிய, விடிய கனமழை பெய்தது. பாதாள சாக்கடை திட்டத்துக்காக வீதிகள் தோறும் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
உடுமலை பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு பெய்ய துவங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பொள்ளாச்சி-தளி ரோடு கார்னரில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தளி ரோடு, தாராபுரம் ரோடு, பழனி ரோடு, கல்பனா ரோடு, வ.உ.சி.வீதி உள்ளிட்ட அனைத்து வீதிகளும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. மேலும் நகரில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக 33 வார்டுகளிலும் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் அதில் மழைநீர் தேங்கி மீண்டும் குழிகள் தோன்றின. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அதில் சிக்கி தவித்தனர்.
அதேப் போல் தாராபுரம் ரோடு, பாரதியார் நகரில் மழைநீர் புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் சைபுதின், நகராட்சி தலைவர் ஷோபனா, பொறியாளர் கண்ணையா, நகர்நல அலுவலர்(பொறுப்பு) இளங்கோ மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து வெள்ள பணிகளை துரிதப்படுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
.jpg)
0 comments:
Post a Comment