Tuesday, August 12, 2014
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், விடுதிக்
கட்டணம் மற்றும் உணவுக் கட்டணம் ரூ.25 லட்சம் மாணவர்கள் பாக்கி வைத்ததைத்
தொடர்ந்து காலவரையின்றி மூடப்பட்ட வஉசி விடுதி, துணைவேந்தர் உத்தரவின்
பேரில் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலுள்ள வஉசி விடுதியில் சுமார் 159 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரத்யேகமாக தனி உணவுக் கூடமும் செயல்படுகிறது. இங்கு தங்கியிருந்த மாணவர்களில் 22 பேர் தவிர மற்ற மாணவர்கள் ஓராண்டுக்கும் மேலாக ரூ.25 லட்சம் வரை விடுதிக் கட்டணம் மற்றும் உணவுக் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தனர். பல்கலை நிர்வாகத் தரப்பில் பலமுறை நினைவூட்டியும் நிலுவைத் தொகை செலுத்தப்படவில்லை. இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் 2 மாதங்களுக்கு தலா ரூ.3.5 லட்சம் வீதம் ரூ.7 லட்சம் கொடுத்ததால் விடுதி செயல்பட்டது.
இதற்கிடையில், சில நாள்களுக்கு முன்பு பணத்தை செலுத்தாத மாணவர்களில் சிலர் உணவுக் கூடத்தை உடனடியாக திறக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குச் சென்ற விடுதிக் காப்பாளர்கள் 2 பேரையும் அவர்கள் சிறை
பிடித்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் உதவியுடன் அந்த 2 பேரும் மீட்கப்பட்டதுடன், விடுதியும் காலவரையின்றி மூடப்பட்டது.
விடுதி மாணவர்கள் வேண்டுகோளுக்கிணங்க துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் விடுதி மற்றும் உணவுக் கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு விடுதிக்குழுவினரை கேட்டுக் கொண்டார். இதை ஏற்று, விடுதிக் குழுவினர் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், விடுதிக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை மாணவர்கள் மூன்று தவணைகளாக (இரு மாதத்திற்கு ஒருமுறை) செலுத்தி நிலுவைத் தொகையை நேர் செய்து கொள்ள வேண்டும். மாதந்தோறும் செலுத்த வேண்டிய உணவுக் கட்டணத்தை அறிவிக்கை வெளியிட்ட 30 நாள்களுக்குள் செலுத்த வேண்டும். உணவகம் தொடங்குவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் ரூ.1.2 லட்சத்தை முன்பணமாக தர வேண்டும். (ஏற்கனவே பல்வேறு கட்டங்களாக பல்கலைக்கழக விடுதி உணவகத்துக்கு நிர்வாகம் ரூ.9 லட்சம் வழங்கியுள்ளது) என முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் உத்தரவின் பேரில், வஉசி விடுதி உடனடியாக திறக்கப்பட்டது. விடுதி உணவகம் விரைவில் திறக்கப்படும் என பதிவாளர் நா.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலுள்ள வஉசி விடுதியில் சுமார் 159 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரத்யேகமாக தனி உணவுக் கூடமும் செயல்படுகிறது. இங்கு தங்கியிருந்த மாணவர்களில் 22 பேர் தவிர மற்ற மாணவர்கள் ஓராண்டுக்கும் மேலாக ரூ.25 லட்சம் வரை விடுதிக் கட்டணம் மற்றும் உணவுக் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தனர். பல்கலை நிர்வாகத் தரப்பில் பலமுறை நினைவூட்டியும் நிலுவைத் தொகை செலுத்தப்படவில்லை. இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் 2 மாதங்களுக்கு தலா ரூ.3.5 லட்சம் வீதம் ரூ.7 லட்சம் கொடுத்ததால் விடுதி செயல்பட்டது.
இதற்கிடையில், சில நாள்களுக்கு முன்பு பணத்தை செலுத்தாத மாணவர்களில் சிலர் உணவுக் கூடத்தை உடனடியாக திறக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குச் சென்ற விடுதிக் காப்பாளர்கள் 2 பேரையும் அவர்கள் சிறை
பிடித்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் உதவியுடன் அந்த 2 பேரும் மீட்கப்பட்டதுடன், விடுதியும் காலவரையின்றி மூடப்பட்டது.
விடுதி மாணவர்கள் வேண்டுகோளுக்கிணங்க துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் விடுதி மற்றும் உணவுக் கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு விடுதிக்குழுவினரை கேட்டுக் கொண்டார். இதை ஏற்று, விடுதிக் குழுவினர் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், விடுதிக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை மாணவர்கள் மூன்று தவணைகளாக (இரு மாதத்திற்கு ஒருமுறை) செலுத்தி நிலுவைத் தொகையை நேர் செய்து கொள்ள வேண்டும். மாதந்தோறும் செலுத்த வேண்டிய உணவுக் கட்டணத்தை அறிவிக்கை வெளியிட்ட 30 நாள்களுக்குள் செலுத்த வேண்டும். உணவகம் தொடங்குவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் ரூ.1.2 லட்சத்தை முன்பணமாக தர வேண்டும். (ஏற்கனவே பல்வேறு கட்டங்களாக பல்கலைக்கழக விடுதி உணவகத்துக்கு நிர்வாகம் ரூ.9 லட்சம் வழங்கியுள்ளது) என முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் உத்தரவின் பேரில், வஉசி விடுதி உடனடியாக திறக்கப்பட்டது. விடுதி உணவகம் விரைவில் திறக்கப்படும் என பதிவாளர் நா.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 18.09.2018 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி ...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...