Tuesday, August 12, 2014
மதுரை அரசு மருத்துவமனையில் தலைமைக் காவலரின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திங்கள்கிழமை திருடிச் சென்றுள்ளனர்.
அலங்காநல்லூர் அச்சம்பட்டியைச் சேர்ந்தவர் கனிச்செல்வம் (32). ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ளார்.
அப் பகுதியில் திங்கள்கிழமை காலை முத்துச்செல்வம் என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த கனிச்செல்வம், தனது மோட்டார் சைக்கிளை மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவின் முன் நிறுத்தியிருந்தாராம்.
பணிமுடிந்து கனிச்செல்வம் திரும்பிவந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.
மோட்டார் சைக்கிளை 2 இளைஞர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மருத்துவமனை கண்காணிப்புக் காமிராவில் மோட்டார் சைக்கிள் திருடுவது பதிவான நிலையில், வழக்கம்போல, திருடியவர்கள் முகம் தெளிவாகத் தெரியவில்லை.
மருத்துவமனையில் 52 இடங்களில் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானவை தரமற்றவை என புகார்கள் எழுந்துள்ளன.
குழந்தைத் திருட்டு, வாகனங்கள் தொடர் திருட்டு நடந்துவரும் நிலையில், தரமற்ற காமிரா விஷயத்தில் யாரும் கவனம் செலுத்தாதது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காமிராக்களை மருத்துவமனை காவல் நிலையம், டீன் அலுவலகம், செவிலியர் கண்காணிப்பு அலுவலகம் என பல இடங்களில் கண்காணிக்க வசதியிருந்தும் யாரும் கண்காணிப்பை முறையாக மேற்கொள்வதில்லை என்றும் செவிலியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
அலங்காநல்லூர் அச்சம்பட்டியைச் சேர்ந்தவர் கனிச்செல்வம் (32). ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ளார்.
அப் பகுதியில் திங்கள்கிழமை காலை முத்துச்செல்வம் என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த கனிச்செல்வம், தனது மோட்டார் சைக்கிளை மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவின் முன் நிறுத்தியிருந்தாராம்.
பணிமுடிந்து கனிச்செல்வம் திரும்பிவந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.
மோட்டார் சைக்கிளை 2 இளைஞர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மருத்துவமனை கண்காணிப்புக் காமிராவில் மோட்டார் சைக்கிள் திருடுவது பதிவான நிலையில், வழக்கம்போல, திருடியவர்கள் முகம் தெளிவாகத் தெரியவில்லை.
மருத்துவமனையில் 52 இடங்களில் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானவை தரமற்றவை என புகார்கள் எழுந்துள்ளன.
குழந்தைத் திருட்டு, வாகனங்கள் தொடர் திருட்டு நடந்துவரும் நிலையில், தரமற்ற காமிரா விஷயத்தில் யாரும் கவனம் செலுத்தாதது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காமிராக்களை மருத்துவமனை காவல் நிலையம், டீன் அலுவலகம், செவிலியர் கண்காணிப்பு அலுவலகம் என பல இடங்களில் கண்காணிக்க வசதியிருந்தும் யாரும் கண்காணிப்பை முறையாக மேற்கொள்வதில்லை என்றும் செவிலியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 18.09.2018 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி ...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...