Tuesday, August 12, 2014
தென் இந்திய வெள்ளாளர் உறவின் முறை சங்க 23–வது ஆண்டு விழா மதுரை பழங்காநத்தத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் செல்வராஜ் பிள்ளை தலைமை தாங்கினார். ராஜா என்ஜினீயரிங் கல்லூரி தலைவர் கண.நாகராஜன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக அகில இந்திய வெள்ளாளர், பிள்ளைமார், செங்குந்தர், முதலியார் கூட்டமைப்பு தலைவரும், நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான கே.ராஜன் கலந்து கொண்டு ஆண்டு விழா மலரை வெளியிட்டு பேசியதாவது:–
நம் நாட்டை வெள்ளையர்களிடம் இருந்து மீட்க போராடியவர்களில் முக்கிய இடம் பிடித்தவர் வ.உ.சி.பிள்ளை. சுதந்திர தியாகி மட்டுமல்ல அவர். ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்ட சமயத்தில் திருக்குறள், தொல்காப்பியம் போன்ற நூல்களுக்கு உரை எழுதி உள்ளார். தொடர்ந்து தமிழக கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை விரட்டியடிப்பது, கைது செய்வது என இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்கின்றனர்.
இது குறித்து தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ஆனாலும் அவரது குரலுக்கு மத்திய அரசு செவி சாய்த்ததாக தெரியவில்லை. இது கண்டிக்கத்தக்கது. இலங்கையில் சுமார் 1½ லட்சம் தமிழர்களை கொன்று குவிக்கவும், தமிழக மீனவர்களை அத்து மீறி கைது செய்யவும் காரணமான ராஜபக்சேவை தூக்கிலிட வேண்டும்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சமுதாயம் தற்போது பிள்ளைமார், முதலியார், சோழியபிள்ளைமார், துளுவ வெள்ளாளர் என பல பிரிவுகளாக உள்ளது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு வெள்ளாளர் என ஒரே பெயருக்கு கீழ் இணைய வேண்டும். வெள்ளாளர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்தியமாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்துவோம். அரசியல் நடத்திடவும், ஆட்சியை பிடிக்கவும் வ.உ.சி.யை முன்னிறுத்தி அனைவரும் செயல்படுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் ஏழைப்பெண்களுக்கு தையல் எந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சங்க செயலாளர் வையாபுரி வரவேற்றார். முத்தையா பிள்ளை உள்பட பலர் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வ.உ.சி. பேரவை மாநில தலைவர் முருகேசன், பொதுச்செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...