Tuesday, August 12, 2014
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீசுவரம் தர்மாபுரம் அருகே உள்ள கன்னாம்பிவிளையை சேர்ந்தவர் செல்லம். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
கன்னாம்பிவிளையில் உள்ள எனக்கு சொந்தமான வீட்டை அதே பகுதியை சேர்ந்த 4 பேர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து கொண்டனர். அவர்கள், அந்த வீட்டை பூட்டி ‘சீல்’ வைத்து விட்டனர். நாங்கள் வீடு இல்லாமல் நடுத்தெருவில் தவித்து வருகிறோம். நாங்கள் அந்த வீட்டில் குடியிருக்கவும், எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தர விட்டது. இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் டி.சரவணன், ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐகோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்ட பின்பு வீட்டை ஆக்கிரமித்துள்ளவர்கள் போலீசாருடன் சென்று வீட்டை இடித்து விட்டனர் என்று கூறினார்.
அப்போது நீதிபதி, போலீசார் தனியாருக்கு சொந்தமான வீட்டை இடிக்க பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இது எந்த வகையில் நியாயம் என்று அரசு வக்கீலை பார்த்து கேள்வி எழுப்பினார். அதன்பின்பு, கோர்ட்டு உத்தரவிட்டபடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஜராகி உள்ளாரா என்று கேட்டார். அப்போது தான், இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ‘பிடிவாரண்டு‘ பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, இந்த பிடிவாரண்டு உத்தரவை செயல்படுத்தி இன்ஸ்பெக்டரை வருகிற 11–ந்தேதி ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 1.3.16 திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் திண்டுக்கல் கரம் முதல் சுழல் அமைப்பு வழியாக திருச்சி இரயில்வே சந்திப்பு வரை இ...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...