Tuesday, August 12, 2014
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீசுவரம் தர்மாபுரம் அருகே உள்ள கன்னாம்பிவிளையை சேர்ந்தவர் செல்லம். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
கன்னாம்பிவிளையில் உள்ள எனக்கு சொந்தமான வீட்டை அதே பகுதியை சேர்ந்த 4 பேர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து கொண்டனர். அவர்கள், அந்த வீட்டை பூட்டி ‘சீல்’ வைத்து விட்டனர். நாங்கள் வீடு இல்லாமல் நடுத்தெருவில் தவித்து வருகிறோம். நாங்கள் அந்த வீட்டில் குடியிருக்கவும், எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தர விட்டது. இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் டி.சரவணன், ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐகோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்ட பின்பு வீட்டை ஆக்கிரமித்துள்ளவர்கள் போலீசாருடன் சென்று வீட்டை இடித்து விட்டனர் என்று கூறினார்.
அப்போது நீதிபதி, போலீசார் தனியாருக்கு சொந்தமான வீட்டை இடிக்க பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இது எந்த வகையில் நியாயம் என்று அரசு வக்கீலை பார்த்து கேள்வி எழுப்பினார். அதன்பின்பு, கோர்ட்டு உத்தரவிட்டபடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஜராகி உள்ளாரா என்று கேட்டார். அப்போது தான், இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ‘பிடிவாரண்டு‘ பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, இந்த பிடிவாரண்டு உத்தரவை செயல்படுத்தி இன்ஸ்பெக்டரை வருகிற 11–ந்தேதி ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...