Wednesday, August 13, 2014
அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் டீக்குடித்துக் கொண்டிருந்தவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
மதுரை விராட்டிபத்து முத்துத்தேவர் காலனியைச் சேர்ந்த ஆண்டியப்பன் மகன் சக்திவேல் (38). இவர் விராட்டிபத்து பிரதான சாலையில் காலையில் டீக்குடித்துக்கொண்டிருந்தார்.அப்போது வந்த அரசுப் பேருந்து சாலையிலிருந்து விலகி டீக்கடை முன்பு இருந்தவர்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் சக்திவேல் மற்றும் கண்ணன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார். கண்ணன் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.
ஷட்டர் விழுந்து சாவு: ராமநாதபுரம் மாவட்டம் ஆலந்தூரைச் சேர்ந்தவர் முகம்மதுஇப்ராஹிம் (55). இவர் மதுரை நாகனாகுளம் பேங்க்காலனி பகுதியில் பேன்ஸி ஸ்டோர் வைத்துள்ளார்.
கடையை பகலில் மூடிவிட்டு மீண்டும் மாலையில் திறந்துள்ளார். அப்போது இரும்பு ஷட்டரை மேலே தூக்கிவிட்டு கடைக்குள் செல்ல முயன்றார். ஆனால், ஷட்டர் திடீரென அவரது தலையில் விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். ஊமச்சிகுளம் போலீஸார் வழக்குப்பதிந்து முகம்மதுஇப்ராஹிம் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மதுரை விராட்டிபத்து முத்துத்தேவர் காலனியைச் சேர்ந்த ஆண்டியப்பன் மகன் சக்திவேல் (38). இவர் விராட்டிபத்து பிரதான சாலையில் காலையில் டீக்குடித்துக்கொண்டிருந்தார்.அப்போது வந்த அரசுப் பேருந்து சாலையிலிருந்து விலகி டீக்கடை முன்பு இருந்தவர்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் சக்திவேல் மற்றும் கண்ணன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார். கண்ணன் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.
ஷட்டர் விழுந்து சாவு: ராமநாதபுரம் மாவட்டம் ஆலந்தூரைச் சேர்ந்தவர் முகம்மதுஇப்ராஹிம் (55). இவர் மதுரை நாகனாகுளம் பேங்க்காலனி பகுதியில் பேன்ஸி ஸ்டோர் வைத்துள்ளார்.
கடையை பகலில் மூடிவிட்டு மீண்டும் மாலையில் திறந்துள்ளார். அப்போது இரும்பு ஷட்டரை மேலே தூக்கிவிட்டு கடைக்குள் செல்ல முயன்றார். ஆனால், ஷட்டர் திடீரென அவரது தலையில் விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். ஊமச்சிகுளம் போலீஸார் வழக்குப்பதிந்து முகம்மதுஇப்ராஹிம் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...