Wednesday, August 13, 2014
மதுரை மாவட்ட கோர்ட்டு அருகே மாட்டுத்தாவணிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இன்று காலை கடை திறப்பதற்கு முன்பே போதை பிரியர்கள் சரக்கு வாங்க காx`x`x`x`த்திருந்தனர். காலை 10 மணி அளவில் கடை திறந்தபோது காத்துக் கொண்டிருந்த அவர்கள் சரக்கு வாங்கும் ஆர்வத்துடன் சென்று டாஸ்மாக் கடை விற்பனையாளர் செல்லத் துரையை நச்சரித்தனர். அவரும் பொறுமையுடன் சரக்குகளை கொடுத்தார்.
இதில் ஒரு வாலிபர் சரக்கு வாங்கி அதே இடத்திலேயே ‘ராவாக’ அடித்தார். சிறிது நேரத்தில் அவருக்கு போதை தலைக்கேறியது. ஆனாலும் அந்த வாலிபர் மீண்டும் சரக்கு வாங்குவதற்காக டாஸ்மாக் விற்பனையாளர் செல்லத்துரையை அணுகினார். அப்போது அவர் சிறிது நேரம் காத்திருங்கள் என்று கூறினார்.
ஆனால் தனக்கு உடனடியாக சரக்கு வேண்டும் என்று செல்லத்துரையை அந்த வாலிபர் தொந்தரவு செய்தார். சரக்கு கொடுக்க சிறிது தாமதம் ஆனதால் பொறுமை இழந்த அவர் போதையில் திடீரென்று செல்லத்துரையின் கை, கன்னத்தில் கடித்தார். மேலும் ஆத்திரம் அடைந்த அவர் அருகில் நின்றிருந்த 4 பேரையும் கடித்தார். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
போதையில் ரகளை செய்த அந்த வாலிபரை அங்கிருந்தவர்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மேலும் அங்கே இருந்த கம்பத்தில் கட்டி போட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டனர். வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் ரகளை செய்த வாலிபர் மானகிரியை சேர்ந்தவர் என தெரியவந்தது.
இதற்கிடையில் சம்பவம் குறித்து அறிந்து கொண்ட வாலிபரின் மனைவியும் சம்பவ இடம் வந்து தனது கணவரை விடுவிக்குமாறு கண்ணீர் மல்க கூறினார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...