Wednesday, August 13, 2014
நாட்டின் 68–வது சுதந்திர தினம் வருகிற 15–ந்தேதி கொண்டாடப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் சுதந்திர தின கொண்டாடட்டங்கள் வெகுசிறப்பாக நடத்தப்படும். இதையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகிறார்கள்.
மதுரையில் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி முக்கிய இடங்களான மீனாட்சி அம்மன் கோவில், ரெயில் நிலையம், விமான நிலையம் மற்றும் முக்கிய வழிபாட்டு தலங்கள், அரசு அலுவலகங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு வாகன சோதனைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
தீவிரவாதிகளால் அடிக்கடி மிரட்டல்கள் வரும் மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் வருகையை வீடியோவில் பதிவு செய்யயப்படுகிறது.
பக்தர்கள் கொண்டுவரும் பொருட்கள், பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
மதுரை ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். பயணிகள் கொண்டுவரும் உடமைகள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. மேலும் மதுரைக்கு வரும் ரெயில்கள், புறப்படும் ரெயில்களிலும் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ரெயில் மூலம் பார்சல் அனுப்புவதிலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையிலும் நாளை (13–ந் தேதி) முதல் 16–ந்தேதி வரை தடை விதிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...