Monday, August 25, 2014
ஈரோட்டை அடுத்த கூரைபாளையத்தில் நந்தா சென்ட்ரல் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் விளையாட்டு விழா நந்தா அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமையில் நடந்தது. பள்ளியின் முதன்மை முதல்வர் லிடியா ஜோஸ்வா வரவேற்றார்.
விழாவில் ஒலிம்பிக் தீபத்தை அர்ஜுனா விருதுபெற்ற ஒலிம்பிக் கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன் ஏற்றி வைத்தார்.
இதன்பிறகு மாணவ– மாணவிகளின் உடற்பயிற்சி நடனம், ஏரோபிக் நடனம், கிரிக்கெட்டி நடனம், யோகா போன்ற பல நிகழ்ச்சிகள் நடந்தன. ஸ்கேட்டிங் மாணவர்களும் பல்வேறு சாகசங்களை செய்து காட்டினர்.
விழாவில் ரிலே, 10 மீட்டர் ஒட்டப்பந்தயம் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.
100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மாணவர் சிபி அஷ்வந்த் முதல் பரிசும், சதிஷ் குமார் 2–வது பரிசும், அஜித் 3–வது பரிசும், பெற்றனர்.
அனைத்து போட்டி களிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் விளையாட்டு அறிக்கையை உடல்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் வாசித்தார். நந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்த குமார் பிரதீப், முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், நந்தா கல்வி நிறுவனங்களின் கல்வி ஆலோசகர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...
-
பொள்ளாச்சி, : பொள் ளாச்சி பகுதியில் ஆபாச படங்களை சி.டி. மற்றும் மெமரி கார்டுகளில் பதவிறக்கம் செய்து விற்பனைக்கு வைத்திருந்த 5 பேரை...
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
மதுரையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு பணம் அனுப்பப்படுகின்றது. இதில் பலமுறை கள்ள நோட்டுகள் வருவதாக ரிசர்...
-
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் ...
-
திருச்சி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மண்டல சாலை மறியல் போராட்டம் நடை...
0 comments:
Post a Comment