Tuesday, August 12, 2014
தமிழகத்திலேயே சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில்தான் அதிக அளவு மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். சீசனுக்கு ஏற்ப இங்கு பொருட்கள் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இம்மாதம் 29–ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது.
மும்பையில் நடைபெறுவதுபோல் தமிழகம் முழுவதும் விநாயகரை வைத்து பூஜை செய்வார்கள். இதற்காக மானாமதுரை மண்பாண்ட தொழிற்கூடத்தில் இரவு பகலாக 7 அடி வரை உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் பல ஆண்டுகாலமாக ஒரு கை இல்லாத மாற்றுத்திறனாளியான பாண்டி ஏராளமான விநாயகர் சிலை செய்து வருகிறார். அதேபோல் வாய் பேச முடியாத தங்க மணி என்பவரும் பல வருடங்களாக விதவிதமான விநாயகர் சிலைகளை செய்து வருகிறார். முதலில் தூய களி மண்ணில் செய்யப்பட்டு பின் வர்ணம் பூசப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதேபோல் மானாமதுரை குலாளர் தெருவில் வீடுகள் தோறும்பெண்கள் கற்பக விநாயகர், விளக்கு விநாயகர், இலை விநாயகர், ஆனந்த விநாயகர் என விதவிதமான சிறிய விநாயகர் சிலைகளை செய்து தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்ககப்படுகிறது. ஏராளமான வெளியூர் வியாபாரிகள் ஆர்டர்கள் கொடுத்து சென்று உள்ளனர். களிமண்விநாயகர் சிலைகள் ரூ. ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செய்து தரப்படுகிறது. வீடுகளில் வைத்து சாமி கும்பிடும் சிறிய விநாயகர் ரூ.5 லிருந்து ரூ.500 வரை கிடைக்கிறது. மானாமதுரையில் சுற்று சுழலுக்கு ஏற்ப களிமண் மூலம் தயாரிக்கப்படுகிறது.
இங்கு தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள் தண்ணீரில் எளிதில் கரைந்து விடும். சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது. ஆனால் கெமிக்கல் கலந்து பிளாஸ்டா பாரிஸ்டரில் செய்யப்படும் விநாயகர் சிலைகளை எளிதில் கரைக்க முடியாது.
சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி கரைக்கும் நீர் நிலைகளும் மாசு அடைந்து விடும். எனவே மண் மூலமே விநாயகர் சிலைகள் வைத்து வழிப்பட தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதனால் ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வாழ்வு கிடைக்கும் என மண்பாண்ட தொழிலாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...