Wednesday, August 13, 2014
கைத்தறி ரகங்களை, விசைத்தறி உள்ளிட்ட வேறு தறிகளில் உற்பத்தி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கைத்தறி சட்டம் (1985) உதவி அமலாக்க அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி: நாட்டின் பாரம்பரியமிக்க தொழிலான கைத்தறித் தொழிலில் ஈடுபட்டு வரும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசால் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் துணிகளுக்கு, விசைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் துணி வகைகளால் சந்தையில் ஏற்படும் விற்பனைப் போட்டியைத் தவிர்ப்பதற்கு இச் சட்டம் வழிவகை செய்கிறது. இதன்படி, கைத்தறிகளில் மட்டுமே உற்பத்தி செய்யக் கூடிய சில ரகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பருத்தி பட்டு வேஷ்டி, பருத்தி பட்டு சேலை, துண்டு மற்றும் அங்கவஸ்திரம், லுங்கி, பெட்சீட், ஜமுக்காளம், டிரஸ் மெட்டீரியல், கம்பளி, ஷால் மஃப்ளர், உல்லன் டுவீட், பாவாடை, தாவணி ஆகிய ரகங்களை கைத்தறி அல்லாத வேறு எந்த வகையான தறியிலும் உற்பத்தி செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதை மீறுவோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து 6 மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் ஒவ்வொரு தறிக்கும் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் மேற்படி ரகங்களை உற்பத்தி செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த சட்டவிதிகள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி அமலாக்க அலுவலர் அலுவலகம், கைத்தறி சட்டம் 1986, கக்கன் தெரு, செனாய் நகர், மதுரை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இதுகுறித்து கைத்தறி சட்டம் (1985) உதவி அமலாக்க அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி: நாட்டின் பாரம்பரியமிக்க தொழிலான கைத்தறித் தொழிலில் ஈடுபட்டு வரும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசால் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் துணிகளுக்கு, விசைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் துணி வகைகளால் சந்தையில் ஏற்படும் விற்பனைப் போட்டியைத் தவிர்ப்பதற்கு இச் சட்டம் வழிவகை செய்கிறது. இதன்படி, கைத்தறிகளில் மட்டுமே உற்பத்தி செய்யக் கூடிய சில ரகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பருத்தி பட்டு வேஷ்டி, பருத்தி பட்டு சேலை, துண்டு மற்றும் அங்கவஸ்திரம், லுங்கி, பெட்சீட், ஜமுக்காளம், டிரஸ் மெட்டீரியல், கம்பளி, ஷால் மஃப்ளர், உல்லன் டுவீட், பாவாடை, தாவணி ஆகிய ரகங்களை கைத்தறி அல்லாத வேறு எந்த வகையான தறியிலும் உற்பத்தி செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதை மீறுவோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து 6 மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் ஒவ்வொரு தறிக்கும் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் மேற்படி ரகங்களை உற்பத்தி செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த சட்டவிதிகள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி அமலாக்க அலுவலர் அலுவலகம், கைத்தறி சட்டம் 1986, கக்கன் தெரு, செனாய் நகர், மதுரை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...