Tuesday, August 12, 2014
அலங்காநல்லூர் பகுதிக்கு தீயணைப்பு நிலையம் ஒதுக்கீடு செய்த முதல்–அமைச்சருக்கு கருப்பையா எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூர் பகுதியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தீயணைப்பு நிலையம் அமைத்திட உத்தரவு வழங்கிய முதலமைச்சருக்கு சட்ட சபையில் கருப்பையா எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்து பேசினார்.
மேலும் அவர் பேசியதாவது:–
சோழவந்தான் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு 36 கோடி ரூபாயும், அலங்காநல்லூர் சார்பு பதிவாளர் அலுவலகம் கட்ட ரூ.50 லட்சமும், விவசாயிகள் நீண்டநாள் கோரிக்கையான சிதிலமடைந்த வைகை பெரியாறு கிளை கால் வாய்களை புணரமைப்பு செய்வதற்காக ரூ.26 கோடியும், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நீண்ட நாள் பணிபுரிந்த 61 தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ததற்கு தனது நன்றியை சோழவந்தான் தொகுதி மக்கள் சார்பாக தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தெரிவிப்பதாக பேசினார்.
தொடர்ந்து சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி ஊராட்சியில் உள்ள 2 ஏக். 40 செண்ட். அரசு புறம்போக்கு நிலத்தில் அலங்காநல்லூர் மற்றும் வாடிப்பட்டி ஒன்றியங்கள் இணைகின்ற இடத்தில் கூடுதல் துணைமின் நிலையம் அமைத்திட வேண்டி கோரிக்கை விடுத்து பேசினார்.
அதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியதாவது சட்டபேரவை உறுப்பினர் வேண்டுகோளுக்கிணங்க மின்தேவையைக் கருத்தில் கொண்டு வருங்காலத்தில் அதிகரிக்கும் மின்தேவையை கவனத்தில் கொண்டு அரசின் நிதிநிலைக்கேற்ப துணைமின் நிலையங்களை சீரமைத்திடவோ, புதியதாக மின்நிலையம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
அதேபோல் அலங்கா நல்லூர் அருகே சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் உள்ள 27 ஏக். அரசு புறம்போக்கு மேய்ச்சல் தரிசு நிலம் உள்ளது. இதில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி அமைத்திட வலியுறுத்தி சட்டசபையில் கருப்பையா எம்.எல்.ஏ. பேசினார். கடந்த 3 ஆண்டுகளில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டிற்காக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சருக்கு மீண்டும் நன்றி தெரிவிப்பதாக பேசினார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 18.09.2018 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி ...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...