Monday, September 01, 2014
மதுரையில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு
வருகிறது. மக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து
சுண்டல், பொறி, கொழுக்கட்டை படையல் செய்து வழிபாடு நடத்தினர். விநாயகர்
கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள்
வழங்கப்பட்டன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு சதுர்த்தியையொட்டி இன்று காலை அறுகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு 18 படி அரிசியில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதை தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை மாவட்டத்தில் இந்து முன்னணி, பாரதீய ஜனதா, அகில இந்து மகாசபை, இந்து மக்கள் கட்சி, சிவசேனா மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மதுரை புறநகர் பகுதியில் 200 இடங்களிலும் மாநகர் பகுதிகளில் 150 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த சிலைகளை வருகிற 31–ந்தேதி வரை வைகை உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று மதுரையில் மாட்டுத்தாவணி, காள வாசல், கோரிப்பாளையம், தெற்குவாசல், சிம்மக்கல், புதூர், மேலமாசி வீதி உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூஜைப் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
விநாயகர் சிலை வழிபாடு மற்றும் ஊர்வலம் நடத்தப்படுவதால் மதுரை நகர் பகுதியில் 2 ஆயிரம் போலீசாரும், புறநகர் பகுதியில் 2500 போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். விநாயகர் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு சதுர்த்தியையொட்டி இன்று காலை அறுகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு 18 படி அரிசியில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதை தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை மாவட்டத்தில் இந்து முன்னணி, பாரதீய ஜனதா, அகில இந்து மகாசபை, இந்து மக்கள் கட்சி, சிவசேனா மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மதுரை புறநகர் பகுதியில் 200 இடங்களிலும் மாநகர் பகுதிகளில் 150 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த சிலைகளை வருகிற 31–ந்தேதி வரை வைகை உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று மதுரையில் மாட்டுத்தாவணி, காள வாசல், கோரிப்பாளையம், தெற்குவாசல், சிம்மக்கல், புதூர், மேலமாசி வீதி உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூஜைப் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
விநாயகர் சிலை வழிபாடு மற்றும் ஊர்வலம் நடத்தப்படுவதால் மதுரை நகர் பகுதியில் 2 ஆயிரம் போலீசாரும், புறநகர் பகுதியில் 2500 போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். விநாயகர் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருப்பைஞ்ஞீலி கோயிலில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண உடல் நலம் குணமடைய விநாயருக்கு 108 தேங்காய் உடைத்து சிவன்,எமதர்மன்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது...
-
பள்ளி மாணவர் கராத்தே போட்டி யில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம். உதவித் தலைமை ஆசிரியர் திரு .GP அவர்களால் பரிசு வழங்கப்பட்ட து. ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தூத்துக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் வந்த கொலை வழக்கு பிரபல ரவுடி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 4 கார்கள் பறிமுதல் செ...
-
சென்னை ஏழுகிணறு சுந்தரம் முதல் தெரு பகுதியில் ஏழுகிணறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கையில் கோணிப்பையுடன் சந்தேகப்பட...

0 comments:
Post a Comment