Monday, September 01, 2014
கட்டடத் தொழிலில் ஈடுபடுவோரை மிரட்டி, கமிஷன்
கேட்டு கடத்தலில் ஈடுபடுவோர் மீது, போலீஸார் கடுமையான நடவடிக்கை
எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கட்டடத் தொழிலில் ஈடுபடும் தொழிலதிபர்களை இடம்வாங்கித் தரும் புரோக்கர்கள் எனும் பெயரில் சிலர் மிரட்டி பணம் பறிப்பதாக, கடந்த ஆட்சியில் புகார்கள் எழுந்தன. இப்பிரச்னை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலித்தது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர், மதுரையில் கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால், சமீப காலமாக கமிஷன் எனும் பெயரில், கட்டடத் தொழிலில் ஈடுபடுவோரை கடத்தி சிலர் பணம் பறிக்க முயற்சிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சுதந்திர தினத்தன்று (ஆக.15) மதுரையில் மலையரசன் என்பவர் கடத்தப்பட்டுள்ளார். கடத்தலுக்கு, இடம் வாங்கிய கமிஷன் பிரச்னையே காரணம் என்கிறார்கள் போலீஸார். அப்படியே இருந்தாலும், பிரச்னையை சட்டரீதியாக அணுக வேண்டுமே தவிர, கடத்திப் பணம் கேட்பது சட்டப்படி குற்றந்தானே.
இப்பிரச்னை குறித்து போலீஸார் வழக்குப் பதிந்தும், தொடர் நடவடிக்கை எடுக்கவில்லையாம். கடத்தல் கும்பல் பயன்படுத்திய வாகனம் போலியான பதிவெண் கொண்டது எனவும் கூறப்படுகிறது. மேலும், தொழிலதிபர்களில் பலருக்கு தொலைபேசி மூலம் கமிஷன் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், புகார்கள் எழுந்து வருகின்றன.
சட்ட விரோதச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார். முதல்வர் அலுவலக மனுக்கள் மீது சிறப்பாக நடவடிக்கை எடுத்து, சிறந்த மாநகர காவல்துறை ஆணையர் விருதுபெற்ற மதுரை ஆணையர் சஞ்சய் மாத்தூர், நிச்சயம் சட்டவிரோதக் கடத்தல் கும்பல் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பார் என்பதே மக்கள் நம்பிக்கையாக உள்ளது.
இது குறித்து, ஆணையர் சஞ்சய் மாத்தூரிடம் கேட்டபோது, நீண்ட காலமாக உள்ள கொடுக்கல், வாங்கல் பிரச்னையில், ஒருவரை சிலர் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. அதையே கடத்தலாகக் கூறுகின்றனர். எனினும், இப்பிரச்னையில் சட்டத்தை மீறி செயல்படுவோர் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கட்டடத் தொழிலில் ஈடுபடும் தொழிலதிபர்களை இடம்வாங்கித் தரும் புரோக்கர்கள் எனும் பெயரில் சிலர் மிரட்டி பணம் பறிப்பதாக, கடந்த ஆட்சியில் புகார்கள் எழுந்தன. இப்பிரச்னை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலித்தது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர், மதுரையில் கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால், சமீப காலமாக கமிஷன் எனும் பெயரில், கட்டடத் தொழிலில் ஈடுபடுவோரை கடத்தி சிலர் பணம் பறிக்க முயற்சிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சுதந்திர தினத்தன்று (ஆக.15) மதுரையில் மலையரசன் என்பவர் கடத்தப்பட்டுள்ளார். கடத்தலுக்கு, இடம் வாங்கிய கமிஷன் பிரச்னையே காரணம் என்கிறார்கள் போலீஸார். அப்படியே இருந்தாலும், பிரச்னையை சட்டரீதியாக அணுக வேண்டுமே தவிர, கடத்திப் பணம் கேட்பது சட்டப்படி குற்றந்தானே.
இப்பிரச்னை குறித்து போலீஸார் வழக்குப் பதிந்தும், தொடர் நடவடிக்கை எடுக்கவில்லையாம். கடத்தல் கும்பல் பயன்படுத்திய வாகனம் போலியான பதிவெண் கொண்டது எனவும் கூறப்படுகிறது. மேலும், தொழிலதிபர்களில் பலருக்கு தொலைபேசி மூலம் கமிஷன் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், புகார்கள் எழுந்து வருகின்றன.
சட்ட விரோதச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார். முதல்வர் அலுவலக மனுக்கள் மீது சிறப்பாக நடவடிக்கை எடுத்து, சிறந்த மாநகர காவல்துறை ஆணையர் விருதுபெற்ற மதுரை ஆணையர் சஞ்சய் மாத்தூர், நிச்சயம் சட்டவிரோதக் கடத்தல் கும்பல் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பார் என்பதே மக்கள் நம்பிக்கையாக உள்ளது.
இது குறித்து, ஆணையர் சஞ்சய் மாத்தூரிடம் கேட்டபோது, நீண்ட காலமாக உள்ள கொடுக்கல், வாங்கல் பிரச்னையில், ஒருவரை சிலர் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. அதையே கடத்தலாகக் கூறுகின்றனர். எனினும், இப்பிரச்னையில் சட்டத்தை மீறி செயல்படுவோர் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment