Monday, September 01, 2014
கர்ப்பப் பையினுள் கட்டிகள் இருந்தால்,
கருத்தரிப்பில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என, மதுரை மீனாட்சி மிஷன்
மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில், குஜராத் மாநில
டாக்டர் திவ்யேஷ் சுக்லா தெரிவித்தார்.
பெண்களுக்கான லேப்ராஸ்கோபிக் மற்றும் ஹிஸ்ட்ரோஸ்கோபி சிகிச்சை முன்னேற்றம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்றது. அதில், அவர் சிறப்புரையாற்றியதாவது:
லேப்ராஸ்கோபிக் சிகிச்சை நம் நாட்டில் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. கர்ப்பப் பை கட்டிகளையும், தேவையற்ற சதைகளையும் லேப்ராஸ்கோபிக் மூலம் அகற்றலாம்.
பொதுவாக, கர்ப்பப் பையில் கட்டிகள் இருப்பவர்களுக்கு நீண்ட நாள்கள் குழந்தைகள் இல்லாத நிலை உள்ளது. அதுபோன்ற குறைபாடுடைய பெண்களுக்கு லேப்ராஸ்கோபிக் உள்ளிட்ட நவீன சாதனங்கள் மூலம் சிகிச்சை அளிக்கும் நிலையில், அவர்கள் கருத்தரிக்கவும் வாய்ப்புள்ளது. லேப்ராஸ்கோபிக் முறை சிகிச்சையால் தேவையற்ற மருந்து, மாத்திரைகளை தவிர்ப்பதுடன், பக்க விளைவுகளையும் தவிர்க்கலாம் என்றார்.
பின்னர், மருத்துவ இயக்குநர் டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி தலைமை வகித்துப் பேசுகையில், தகவல் பரிமாற்றத் துறை மருத்துவத் துறைக்கு பேருதவியாக உள்ளது என்றார். மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவு பேராசிரியை டாக்டர் உமாதேவி பேசுகையில், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் உரிய நேரத்தில் அவர்களை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினால் உயிரைக் காக்கும் சிகிச்சை அளிக்கலாம் என்றார்.
இதில், டாக்டர் பத்மா வரவேற்றார். டாக்டர்கள் மீனாம்பாள், அங்கையற்கண்ணி, ரேவதி ஜானகிராமன், லலிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். டாக்டர் சாந்தி நன்றி கூறினார்.
பெண்களுக்கான லேப்ராஸ்கோபிக் மற்றும் ஹிஸ்ட்ரோஸ்கோபி சிகிச்சை முன்னேற்றம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்றது. அதில், அவர் சிறப்புரையாற்றியதாவது:
லேப்ராஸ்கோபிக் சிகிச்சை நம் நாட்டில் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. கர்ப்பப் பை கட்டிகளையும், தேவையற்ற சதைகளையும் லேப்ராஸ்கோபிக் மூலம் அகற்றலாம்.
பொதுவாக, கர்ப்பப் பையில் கட்டிகள் இருப்பவர்களுக்கு நீண்ட நாள்கள் குழந்தைகள் இல்லாத நிலை உள்ளது. அதுபோன்ற குறைபாடுடைய பெண்களுக்கு லேப்ராஸ்கோபிக் உள்ளிட்ட நவீன சாதனங்கள் மூலம் சிகிச்சை அளிக்கும் நிலையில், அவர்கள் கருத்தரிக்கவும் வாய்ப்புள்ளது. லேப்ராஸ்கோபிக் முறை சிகிச்சையால் தேவையற்ற மருந்து, மாத்திரைகளை தவிர்ப்பதுடன், பக்க விளைவுகளையும் தவிர்க்கலாம் என்றார்.
பின்னர், மருத்துவ இயக்குநர் டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி தலைமை வகித்துப் பேசுகையில், தகவல் பரிமாற்றத் துறை மருத்துவத் துறைக்கு பேருதவியாக உள்ளது என்றார். மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சைப் பிரிவு பேராசிரியை டாக்டர் உமாதேவி பேசுகையில், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் உரிய நேரத்தில் அவர்களை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினால் உயிரைக் காக்கும் சிகிச்சை அளிக்கலாம் என்றார்.
இதில், டாக்டர் பத்மா வரவேற்றார். டாக்டர்கள் மீனாம்பாள், அங்கையற்கண்ணி, ரேவதி ஜானகிராமன், லலிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். டாக்டர் சாந்தி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment