Saturday, September 13, 2014
பெரம்பூர், செப். 13–
கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் பத்மாவதியிடம் சங்கிலி பறிக்க முன்றனர். முயற்சி பலிக்காததால் பத்மாவதியை கீழே தள்ளி விட்டு சென்றனர். இதில் அவர் காயம் அடைந்தார்.
இதுபோல் கொடுங்கையூர் ராஜ ரத்தினம் நகரைச் சேர்ந்த முத்துவின் மனைவி தேவிகா (43), அவரது தம்பி சகாயராஜ் ஆகியோர் கொடுங்கையூரில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் தேவிகாவிடம் சங்கிலி பறிக்க முயன்றனர். இதை தடுத்த சகாயராஜ் தேவிகா ஆகியோரை கொள்ளையர்கள் மிதித்து கீழே தள்ளி விட்டனர். இதில் 2 பேரும் காயம் அடைந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment