Saturday, September 13, 2014
ராயபுரம், செப். 13–
கொருக்குப்பேட்டை பாரதியார் நகரை சேர்ந்தவர் சுகன்யா (40). அவரது மகள் வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதி ஜீவா நகரை சேர்ந்தவர் முத்துராஜ் (25). ஆட்டோ டிரைவர். இவரது ஆட்டோ ஸ்டாண்டு வழியாகத்தான் சுகன்யா மகள் நடந்து சென்று படித்து வந்தார். அப்போது அவரை முத்துராஜ் கிண்டல் செய்தார்.
இதுகுறித்து சுகன்யா ஆர்.கே. நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவியை கிண்டல் செய்த முத்துராஜை கைது செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment