Monday, September 08, 2014
மதுரை புத்தகத் திருவிழாவில் ரூ. 3 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி இருப்பதாக, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் (பபாசி) சார்பில், மதுரையில் 9ஆவது புத்தகத் திருவிழா, கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை நிறைவு நாள் என்பதால், புத்தகக் கண்காட்சிக்கு ஏராளமானோர் வந்திருந்தனர்.
இதில், ரூ. 3 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியிருப்பதாக, பபாசியின் தலைவர் மெ. மீனாட்சி சோமசுந்தரம், செயலர் கே.எஸ். புகழேந்தி ஆகியோர் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூட்டாகக் தெரிவித்தது: புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்தில், மதுரை புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மதுரை மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து புத்தகங்களைப் பார்வையிட்டு, வாங்கிச் சென்றனர். 150 பள்ளி, கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் வந்து பார்வையிட்டனர்.
அவர்களில் 10 சதவீதம் பேர் புத்தகங்களை வாங்கினர். புத்தகக் காட்சியை மொத்தம் 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு வகையான புத்தகங்களை வாங்கிச் சென்ற வகையில், ரூ. 3 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
கடந்த ஆண்டு ரூ. 2 கோடிக்கு புத்தகம் விற்பனையாகியிருந்தது. வாசிப்போர் எண்ணிக்கை மேலும் உயர்ந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இதற்கு உதவியாக இருந்த மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்துக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.
தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் (பபாசி) சார்பில், மதுரையில் 9ஆவது புத்தகத் திருவிழா, கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை நிறைவு நாள் என்பதால், புத்தகக் கண்காட்சிக்கு ஏராளமானோர் வந்திருந்தனர்.
இதில், ரூ. 3 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியிருப்பதாக, பபாசியின் தலைவர் மெ. மீனாட்சி சோமசுந்தரம், செயலர் கே.எஸ். புகழேந்தி ஆகியோர் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூட்டாகக் தெரிவித்தது: புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்தில், மதுரை புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மதுரை மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து புத்தகங்களைப் பார்வையிட்டு, வாங்கிச் சென்றனர். 150 பள்ளி, கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் வந்து பார்வையிட்டனர்.
அவர்களில் 10 சதவீதம் பேர் புத்தகங்களை வாங்கினர். புத்தகக் காட்சியை மொத்தம் 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு வகையான புத்தகங்களை வாங்கிச் சென்ற வகையில், ரூ. 3 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
கடந்த ஆண்டு ரூ. 2 கோடிக்கு புத்தகம் விற்பனையாகியிருந்தது. வாசிப்போர் எண்ணிக்கை மேலும் உயர்ந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இதற்கு உதவியாக இருந்த மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்துக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment