Wednesday, September 03, 2014
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது ஒரு நாள் கிரிகெட் போட்டி இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காமில் இன்று மதியம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பீ்ல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியைச் சேர்ந்த குக்- ஹேல்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் முறையே 9, 6 ரன்களில் புவனேஸ்வர் குமார் பந்தில் வீச்சில் வீழ்ந்தனர்.
3-வது வீரராக களம் இறங்கிய பேலன்ஸ் 7 ரன்னில் முகமது சமி பந்தில் வீச்சில் பெவிலியன் திரும்பினார். இங்கிலாந்து அணி 23 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
4-வது விக்கெட்டுக்கு ரூட்டுடன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடினார்கள். ஆனால் அதிரடியாக ரன் குவிக்க இயலவில்லை. இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 28.2 ஓவரில் 103 ரன்னாக இருக்கும்போது மோர்கன் 32 ரன்னில் ஆட்டம் இழந்தார். ரூட் 44 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
அதன்பின் வந்த மொயீன் அலியைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 49.3 ஓவரில் 206 ரன்கள் எடுத்து சுருண்டது. மொயீன் அலி சிறப்பாக விளையாடி 50 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இந்திய அணி தரப்பில் சமி 3 விக்கெட்டும், புவனேஸ்குமார், ஜடேஜா தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment