Wednesday, September 10, 2014
திருப்பூரில் வாகனங்களை ஓட்டிக் கொண்டே செல்போன் பேசிச் செல்வோர் மீது காவல் துறை மேற்கொள்ளும் நடவடிக்கையை, அதன் நோக்கம் நிறைவேறும் வகையில் முறைப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் சேசஷாய்க்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாநகரத்தில் கைப்பேசியை பயன்படுத்திக்கொண்டே வாகனம் ஓட்டுவதை தடுத்திடும் வகையில் ஆணையரின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இதன் மூலம் ஏராளமான சாலை விபத்துக்களை தடுத்திட முடியும். இது குறித்து இன்னும் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரையும் இணைத்துக் கொண்டு அதற்கான நிகழ்ச்சிகளை திட்டமிடும்போது இந்த அறிவிப்பின் நல்ல நோக்கம் முழுமையாக பூர்த்தியடைய உதவி செய்யும்.
ஆனால், நல்ல விளைவுகளை எதிர்பார்த்து காவல் ஆணையர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு சில இடங்களில் காவல்துறையினராலேயே தவறானதாகப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களில் மட்டும் பல்வேறு இடங்களில் கைப்பேசியை பயன்படுத்திக்கொண்டே இரண்டு சக்கர வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும், அவர்களது அலைபேசியை பறிமுதல் செய்வதும் நடந்துள்ளது. இதில் சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி அதில் அமர்ந்து கொண்டு கைப்பேசியில் பேசியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சில இடங்களில் நாகரிகமற்ற வார்த்தைகளை காவல்துறையினர், காவல் இளைஞர் படையை சார்ந்தவர்கள் வாகன ஓட்டிகள் மீது பயன்படுத்தியுள்ளனர்.
எனவே அத்துமீறுபவர்கள் மீது நடவடிக்கை என்பதற்கு பதிலாக இது போன்ற நடவடிக்கைகள் சாலைவிபத்தை தடுக்கும் ஆணையரின் நோக்கத்தை பாதிக்கும். மேலும் இரண்டு சக்கர வாகனம் மட்டுமல்லாது,மூன்று, நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிச்செல்பவர்கள் கைப்பேசியை பயன்படுத்திக்கொண்டு வாகனங்களை ஓட்டிச் செல்வதும் பெரும்பகுதி விபத்துகளுக்கு காரணமாக உள்ளன. எனவே இது குறித்தும் உரிய விழிப்புணர்வும், தடுத்த நிறுத்தவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
திருப்பூர் போன்ற வாகனப் பெருக்கம் மிகுந்த நகரத்தில், இது போன்ற அறிவிப்புகளை வெளியிடும்போது பல்வேறு இயக்கங்கள்,அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு போதுமான அளவு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வதும் அவசியம். எனவே ஆணையரின் நோக்கம் சிதையாமல் இருக்க காவல்துறையின் நடவடிக்கைகளை முறைப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்வதாக கே.காமராஜ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
.jpg)
.jpg)
0 comments:
Post a Comment