Thursday, September 18, 2014
கவுந்தப்பாடி அருகே ஆழ்துளை கிணறு குழாய் அடைப்பை சரிசெய்தபோது தலையில் கம்பிகுத்தியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
கவுந்தப்பாடி அருகே ஓடத்துறை ராசாகோவில்தோட்டத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்று குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததால் தண்ணீர் வரவில்லை. எனவே ஆழ்துளை கிணற்று குழாய்களில் உள்ள அடைப்பை சரிசெய்ய கவுந்தப்பாடியை சேர்ந்த வர்க்கீஸ், கா.புதூரை சேர்ந்த தானுக்காரன், வாத்தியார், கவுந்தப்பாடி அருகே மாரப்பம்பாளையத்தை சேர்ந்த ரவி என்கிற பார்த்தீபன் (வயது 36) ஆகிய 4 பேர் சென்றிருந்தனர்.
அவர்கள் நேற்று ஆழ்துளை கிணற்று குழாய்களை வெளியே எடுத்து பழுதுநீக்கி கொண்டு இருந்தனர். அப்போது குழாய்களை வெளியே எடுக்கும்போது இயந்திரத்தின் (செயின்பிளாக்) கம்பி ஒன்று உடைந்து விழுந்தது.
போலீஸ் விசாரணை
இதில் ரவியின் தலையில் கம்பி வேகமாக குத்தியது. இதனால் கீழே விழுந்த ரவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக செத்தார். மேலும் தானுக்காரன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ரவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ரவிக்கு பூங்கொடி (33) என்கிற மனைவியும், சூர்யராஜ் என்கிற மகனும், சத்தியசந்ஜிதா என்கிற மகளும் உள்ளனர்.
தொழிலாளி
கவுந்தப்பாடி அருகே ஓடத்துறை ராசாகோவில்தோட்டத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்று குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததால் தண்ணீர் வரவில்லை. எனவே ஆழ்துளை கிணற்று குழாய்களில் உள்ள அடைப்பை சரிசெய்ய கவுந்தப்பாடியை சேர்ந்த வர்க்கீஸ், கா.புதூரை சேர்ந்த தானுக்காரன், வாத்தியார், கவுந்தப்பாடி அருகே மாரப்பம்பாளையத்தை சேர்ந்த ரவி என்கிற பார்த்தீபன் (வயது 36) ஆகிய 4 பேர் சென்றிருந்தனர்.
அவர்கள் நேற்று ஆழ்துளை கிணற்று குழாய்களை வெளியே எடுத்து பழுதுநீக்கி கொண்டு இருந்தனர். அப்போது குழாய்களை வெளியே எடுக்கும்போது இயந்திரத்தின் (செயின்பிளாக்) கம்பி ஒன்று உடைந்து விழுந்தது.
போலீஸ் விசாரணை
இதில் ரவியின் தலையில் கம்பி வேகமாக குத்தியது. இதனால் கீழே விழுந்த ரவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக செத்தார். மேலும் தானுக்காரன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ரவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ரவிக்கு பூங்கொடி (33) என்கிற மனைவியும், சூர்யராஜ் என்கிற மகனும், சத்தியசந்ஜிதா என்கிற மகளும் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...


0 comments:
Post a Comment