Monday, September 08, 2014
மதுரை சின்னசொக்கி குளத்தை சேர்ந்தவர் ஜமால் முகம்மது (வயது61), ரியல்
எஸ்டேட் அதிபர். இவர் சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமாகிவிட்டார்.
இதுகுறித்து அவரது உறவினர்கள் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தனர்.
இந்த நிலையில் மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த சங்கர் என்ற வாலிபர் மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர் ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகம்மதுவிடம் வேலை பார்த்து வந்ததாகவும், ரூ.2 லட்சம் பணம் தரமறுத்ததால் கொடைக்கானல் மலையில் வைத்து கொலை செய்து விட்டு, உடலை பள்ளத்தில் வீசி விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்பட்ட திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி (39) என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.
மாயமான ஜமால் முகம்மது கொலை செய்யப்பட்டாரா? என்பதை ஊர்ஜிதப்படுத்த மதுரை தல்லாகுளம் சப்–இன்ஸ்பெக்டர் கார்த்திக்செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொடைக்கானலுக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே 100 அடி பள்ளத்தில் எரிந்த நிலையில் ஆண் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்து புதைத்து விட்டனர்.
உடல் அருகே கிடந்த ஆடை மற்றும் சில பொருட்களை கைப்பற்றிய கொடைக்கானல் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த உடல் ரோட்டில் இருந்து 100 அடிபள்ளத்தில் தூக்கி எறிந்துள்ளதால் அந்த உடல் மதுரையில் மாயமான ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகம்மதுவின் உடலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனவே இதுகுறித்து மதுரை தனிப்படை போலீசார் கொடைக்கானல் போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாயமான ஜமால் முகம்மதுவின் உறவினர்களையும் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.
இதனிடையே கோர்ட்டில் சரண் அடைந்த சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சித்திக், மார்த்தாண்டன், மாரியப்பன் ஆகியோரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த சங்கர் என்ற வாலிபர் மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர் ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகம்மதுவிடம் வேலை பார்த்து வந்ததாகவும், ரூ.2 லட்சம் பணம் தரமறுத்ததால் கொடைக்கானல் மலையில் வைத்து கொலை செய்து விட்டு, உடலை பள்ளத்தில் வீசி விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்பட்ட திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி (39) என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.
மாயமான ஜமால் முகம்மது கொலை செய்யப்பட்டாரா? என்பதை ஊர்ஜிதப்படுத்த மதுரை தல்லாகுளம் சப்–இன்ஸ்பெக்டர் கார்த்திக்செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொடைக்கானலுக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே 100 அடி பள்ளத்தில் எரிந்த நிலையில் ஆண் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்து புதைத்து விட்டனர்.
உடல் அருகே கிடந்த ஆடை மற்றும் சில பொருட்களை கைப்பற்றிய கொடைக்கானல் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த உடல் ரோட்டில் இருந்து 100 அடிபள்ளத்தில் தூக்கி எறிந்துள்ளதால் அந்த உடல் மதுரையில் மாயமான ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகம்மதுவின் உடலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனவே இதுகுறித்து மதுரை தனிப்படை போலீசார் கொடைக்கானல் போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாயமான ஜமால் முகம்மதுவின் உறவினர்களையும் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.
இதனிடையே கோர்ட்டில் சரண் அடைந்த சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சித்திக், மார்த்தாண்டன், மாரியப்பன் ஆகியோரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment