Monday, September 08, 2014
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் தல்லாகுளம் போலீசார் ஆயுதப்படை குடியிருப்புக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போலீஸ்காரர் மகேந்திரனின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது அங்கு வீட்டுக்குள் ஒரு பெண் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த பெண்ணின் பெயர் ஆனந்தி (வயது32) என்பதும், கே.கே.நகரைச்சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி என்பதும் தெரியவந்தது.
கடந்த ஓராண்டாக கணவரை பிரிந்து ஆனந்தி வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் அவர் போலீஸ்காரர் மகேந்திரன் வீட்டில் தீயில் எரிந்து இறந்துள்ளார். அவர் இங்கு வந்தது எப்படி? தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டாரா? என்பது மர்மமாக உள்ளது.
தற்போது போலீஸ்காரர் மகேந்திரன் மாயமாகி விட்டார். அவர் சிக்கினால் தான் இளம்பெண் சாவின் உண்மை நிலவரம் தெரியவரும். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீஸ் குடியிருப்பிற்குள் போலீஸ்காரர் வீட்டிலேயே இளம்பெண் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment