Monday, September 08, 2014
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் தல்லாகுளம் போலீசார் ஆயுதப்படை குடியிருப்புக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போலீஸ்காரர் மகேந்திரனின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது அங்கு வீட்டுக்குள் ஒரு பெண் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த பெண்ணின் பெயர் ஆனந்தி (வயது32) என்பதும், கே.கே.நகரைச்சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி என்பதும் தெரியவந்தது.
கடந்த ஓராண்டாக கணவரை பிரிந்து ஆனந்தி வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் அவர் போலீஸ்காரர் மகேந்திரன் வீட்டில் தீயில் எரிந்து இறந்துள்ளார். அவர் இங்கு வந்தது எப்படி? தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டாரா? என்பது மர்மமாக உள்ளது.
தற்போது போலீஸ்காரர் மகேந்திரன் மாயமாகி விட்டார். அவர் சிக்கினால் தான் இளம்பெண் சாவின் உண்மை நிலவரம் தெரியவரும். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீஸ் குடியிருப்பிற்குள் போலீஸ்காரர் வீட்டிலேயே இளம்பெண் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
0 comments:
Post a Comment